பக்கம் எண் :

 அணி வகுப்பு படலம் 583

கொழு நிணக்கற்றை `கால - கொழுமையுடைய நிணத்தொகுதி
வெளிப்பட்டுச் சொரியுமாறு; தீட்டிய படைக்கை வீர!- கூர்மை
மிக்க ஆயுதங்களைக் கரங்களில் ஏந்திய வீரனே!  சேனையின்
தலைவ!
- அரக்கர் படையின் தலைவனே! தெள்ளி   ஈட்டிய-
தெளிந்து திரட்டிய; அரக்கர்  தானை -  இராக்கதப் படையில்;
இருநூறு வெள்ளம் கொண்டு
- இருநூறு வெள்ளம் சேனையை
(உன்     பொறுப்பில்    எடுத்துக்)      கொண்டு;      நின்
பெருங்கிளைகளோடும்  
-          தலைவர்      முதலிய
படைச்சுற்றத்தாரோடும்    (கோட்டையின்) கீட்டிசை  வாயில்
நிற்றி
  -   கிழக்குத்   திக்கு    வாயிலில்  நிற்பாயாக (என்று
ஆணையிட்டான்)
 

காலகேயர்-இராவணன்   பகைவர்.   6951ஆம்  பாடலில்
கீழ்த்திசை   வாயிலில்  இராமசேனை  நீலன் தலைமையில் 17
வெள்ளத்தோடும்   நின்றது  குறிக்கப்பட்டது. அதற்கெதிராகப்
பிரகத்தன்  தலைமையில்  இராவணன் அரக்கர் படை இருநூறு
வெள்ளத்தை அங்கு அனுப்ப ஆணையிட்டான். நாகலோகத்தில்
நின்றும் போர்க்காட்டியவர் என்பது பழைய உரை.
 

(18)
 

6964.

'காலன்தன் களிப்புத் தீர்த்த மகோதர! காலையே

போய்,

மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும் 
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி--

வெள்ளம் ஆன

நால்-ஐம்பதோடும் சென்று, நமன் திசை வாயில்

நண்ணி.

 

காலன்   தன்  களிப்புத் தீர்த்த மகோதர! - இயமனின்
செருக்கினை   ஒழித்த   மகோதரனே!    காலையே  போய்-
காலத்தோடே சென்று; மால் ஒன்றும் மனத்து- யுத்தப் பித்துக்
கொண்ட   மனமுடைய;   வீரன்!  மாபெரும் பக்கனோடும்-
வீரனாகிய   மாபெரும்     பக்கனோடும்;    வெள்ளம்  நால்
ஐம்பதோடும்   சென்று 
- இருநூறு வெள்ளம் சேனையோடும்
போய்;நமன் திசை வாயில் நண்ணி- நமன் வாழும் திசையாகிய
தெற்குத் திசையையடைந்து; கூலம் கொள் குரங்கையெல்லாம்-
வால்   கொண்ட    குரங்குகள்  அனைத்தையும்; கொல்லுதி -
கொன்று தீர்ப்பாயாக.