பக்கம் எண் :

584யுத்த காண்டம் 

எல்லா     உயிரையும்   கொல்லவல்ல     செருக்கையும்
அழி`த்தவனாதலின் "காலன் தன் களிப்புத் தீர்த்த  மகோதரன்"
எனப்பட்டான். யுத்தப் பித்துக் கொண்டவன் மாபெரும் பக்கன்.
மால்-பித்து.   வெறி,   மகா  பாரிசுவன்  எனும் வடசொல்லை,
மாபெரும்   பக்கன்    எனத்    தமிழ்ப்படுத்தினார் ஆசிரியர்.
காலை-காலம். "காலையே போய்" இந்தக் காலை நேரத்திலேயே
போய் எனினுமாம்.  மகோதரன்  தென்திசை   வாயிலில் உள்ள
(6952) அங்கதனுக்கெதிராக அனுப்பப்படுகிறான். 
 

(19)
 

6965.

'ஏற்றம் என், சொல்லின் என்பால்? 

இந்திரன்பகைஞ!--அந் நாள்

காற்றினுக்கு அரசன் மைந்தன் கடுமை நீ கண்டது  

அன்றோ?

நூற்று-இரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர்  

சுற்ற,

மேல் திசை வாயில் சேர்தி, விடிவதன் முன்னம்-- 

வீர!

 

இந்திரன்   பகைஞ! - இந்திரனின்  பகைவனாகிய இந்திர
சித்தே!   என்பால்   ஏற்றம்    சொல்லின் என்? - (உன்)
பெருமையை    என்னிடம்    சொல்வதால்    என்ன  பயன்?
(எனக்கேதெரியும்)அந்நாள் - இலங்கை எரிந்த அந்த   நாளில்;
காற்றினுக்கு அரசன் மைந்தன்
- காற்றரசனாகிய   வாயுவின்
மகனான அனுமனுடைய;   கடுமை  நீ கண்டது அன்றோ? -
கடிய  ஆற்றலை  நீ (கண்ணாரக்)  கண்டவன் அன்றோ?வீர! -
வீரனே!  நூற்றிரண்டு  ஆய வெள்ளம் - இருநூறு வெள்ளம்
சேனையை; நுன்  பெரும்   படைஞர் சுற்ற-; உனது பெரும்
படையினர் சூழ்ந்து  நிற்க மேல் திசை வாயில் -; (இலங்கைக்
கோட்டையின்) மேற்குத் திக்கு வாயிலுக்கு;விடிவதன் முன்னம்
சேர்தி
- விடிவதற்குள் சென்றடைவாயாக!
 

அனுமன்    பதினேழு   வெள்ளம்   சேனையோடு மேற்கு
வாயிலுக்கு  அனுப்பப்பட்டான்.    அனுமன்  வலிமை இலங்கை
எரியுண்ட போதும்,  அசோக   வனத்தை   அழித்த   போதும்
அறியப்பட்டுள்ளதாதலின்,  அவனை  எதிர்த்து நிற்க, இந்திரனை
வென்ற    தன்    மகன்   இந்திரசித்தையே  அனுப்புகின்றான்
இராவணன்.
 

(20)