6966. | 'இந் நெடுங் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி |
| கண்டாய்; |
| புன் நெடுங் குரங்கின் சேரல் புல்லிது; புகழும் |
| அன்றால்; |
| அந் நெடு மூலத்தானைஅதனொடும், |
| அமைச்சரோடும், |
| தொல் நெடு நகரி காக்க--விருபாக்க!' என்னச் |
| சொன்னான். |
|
விருபாக்க! - விருபாக்கனே! இந்நெடுங்காலம் எல்லாம் - இந்த (நீண்ட) நெடுங்காலம் முழுவதும்; இமையவர்க்கு இறுதிகண்டாய் - தேவர்களோடு போரிட்டு அவர்கள், சாவையே கண்டுவந்தவன் நீ;புல் நெடுங்குரங்கின் சேரல் புல்லிது - (இன்று இந்தப்) புல்லிய ஆனால் நெடும் தொகையினையுடைய குரங்குகளின் மேல் நீ (போர் புரியப்) போவது இழிந்தது; புகழும் அன்று- உனக்கு அது புகழையும் தராது; (ஆதலால்) அந்நெடும் மூலத்தானை அதனொடும்- அந்தப் பெருமைக்குரிய மூலபலத்துடனும்; அமைச்சரோடும் - மந்திரிமாருடனும்; தொல் நெடும் நகரிகாக்க - பழமையும் பெருமையும் உடைய இந்த இலங்கை மாநகரைக் காப்பாயாக! என்று சொன்னான் - என்று கூறினான். |
விருபாக்கன்-இராவணன் படைத்தலைவர்களுள் ஒருவன். |
(21) |
6967. | 'கட கரி புரவி ஆள் தேர், கமலத்தோன் உலகுக்கு |
| இப்பால் |
| புடை உள பொருது, கொண்டு, போர் பெறாப் |
| பொங்குகின்ற |
| இடை இடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம் |
| கொண்டு, |
| வட திசை வாயில் காப்பேன் யான்' என வகுத்து |
| விட்டான். |
|
கமலத்தோன் உலகுக்கு- பிரம லோகத்துக்கு; இப்பால் உள புடை- இப்புறமுள்ள இடங்களில் (எல்லாம்); பொருது கொண்டு -போரிட்டு (அவ்விடங்களை வெற்றி) கொண்டு; போர்பெறாப் பொங்குகின்ற- மேலும் போர் போதாமல் பொங்கியெழுந்தவாறு |