உள்ள; கடகரி புரவி ஆள் தேர் - மதப் பெருக்குடைய யானை, குதிரை, வாள், தேர்ப்படையும் ஆங்காங்கு நெருங்கியுள்ள சேனை; இருநூறு வெள்ளம் கொண்டு - இருநூறு வெள்ளங்களையும் கொண்டு; யானே வடதிசை காப்பேன் - நானே வடக்குக் கோட்டை வாயிலில் காக்கும் பொறுப்பை மேற்கொள்வேன்; என வகுத்துவிட்டான் - என்று கூறி (இவ்வாறு) ஆயிரம் வெள்ளம் (அரக்க) சேனையையும் பிரித்து விட்டான் (இராவணன்) |
இராமனும் இலக்குவனும் வடதிசைக் கோட்டை வாயிலின் முன் உள்ளமையால் வடதிசைப் பொறுப்பைத் தானே ஏற்றான் இராவணன். பெரிய பொறுப்பினைப் பிறர்க்குத் தள்ளாமல், தாமே ஏற்கும் அக்காலத் தலைமைப் பண்புகளுள் ஒன்றைக் கவிஞர் சுட்டிச் செல்வது காண்க. |
(22) |
கங்குல் நீங்க, கதிரவன் தோன்றல் |
6968. | கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம்-காணும் |
| நலம் கிளர் தேவர்க்கேயோ, நான்மறை |
| முனிவர்க்கேயோ, |
| பொலம் கெழு சீதைக்கேயோ, பொரு வலி |
| இராமற்கேயோ, |
| இலங்கையர் வேந்தற்கேயோ,--எல்லார்க்கும் |
| செய்தது இன்பம். |
|
கலங்கிய கங்குல் ஆகி- (எல்லோரும்) கலங்குவதற்குக் காரணமாய் கங்குல் எனும் பெயர் கொண்டு; நீங்கி கற்பம்- அகன்ற ஊழிக்காலமானது; நலம் கிளர் தேவர்க்கேயோ?- (தீயோராம் அரக்கர் அழிந்து நல்லோர் வாழும்) நலம் காண அவாவியுள்ள தேவர்க்கு மட்டும்தானா? நான் மறை முனிவர்க்கேயோ- நான்கு வேதங்களிலும் வல்ல முனிவர்க்கு மட்டுந்தானா? பொலம் கெழு சீதைக்கேயோ ? - பொலிவு மிக்க சீதைக்கு மட்டும் தானா? இலங்கையர் வேந்தற்கேயோ ? - இலங்கை மக்களின் வேந்தனாகிய இராவணனுக்கு மட்டும் தானா?எல்லார்க்கும் இன்பம் செய்தது- (தனித்தனியாக அல்லாமல்) இவர்கள் எல்லோர்க்கும் ஒரு சேர இன்பம் விளைத்தது. |
இராவணனின் துன்பம் நீங்கிக் கதிமோட்சம் பிறந்தது என்று தேவர், முனிவர்க்கும், போர் தொடங்கித் தனக்கு விடுதலை வரும் எனப் |