பக்கம் எண் :

 அணி வகுப்பு படலம் 587

பிராட்டிக்கும்.   அரக்கனை    ஒழிக்க   விடியலை   விரும்பி
நின்றதனால்   இராமனுக்கும்,   போரில்  இராமனை  வென்று
சீதையை  யடைவேன்   என்று கருதும் இராவணனுக்கும் அந்த
இரவு அவர் நினைவால் இன்பம் விளைத்தது. 
 

(23)
 

6969.

அளித் தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் 

கொடுமை அஞ்சி,

வெளிப்படல் அரிது என்று உன்னி, வேதனை 

உழக்கும் வேலை,

களித்தவற் களிப்பு நீக்கி, காப்பவர்தம்மைக்

கண்ணுற்று,

ஒளித்தவர் வெளிப்பட்டென்ன,--கதிரவன் உதயம்

செய்தான்.

 

அளித்தகவு     இல்லா   ஆற்றல்    அமைந்தவன்-
கருணையெனும் பண்பு  இன்றி  வலிமையெனும்  பண்பு மட்டும்
அமைந்தவன் ஆகிய  இராவணனுடைய;     கொடுமையஞ்சி-
கொடுங்கோன்மைக்குப் பயந்து;  வெளிப்படல் அரிது என்று-
நாம்    வெளிப்பட்டு    உலவுதற்கு  இயலாது என்று;உன்னி -
நினைத்து (மறைந்து வாழ்ந்து);  வேதனை  யழக்கும் வேலை-
துன்பத்தால் துவளுங்காலத்து;  களித்தவன்  களிப்பு  நீக்கி-
செருக்குற்ற   அவனின்  செருக்கினை   அழித்து;   காப்பவர்
தம்மைக் கண்ணுற்று
-  பாதுகாக்கும்  செங்கோல் வேந்தனைக்
கண்டு;ஒளித்தவர்  வெளிப்பட்டு என்ன - மறைந்திருந்த குறு
நிலமன்னர் வெளியே  புறப்பட்டாற்  போல, கதிரவன் உதயம்
செய்தான்
- சூரியவன் (கீழ்வானில்) உதித்தான்.
 

கொடுங்கோலனுக்கு அஞ்சி மறைந்து வாழ்ந்தோர் செங்கோல்
வேந்தன் தோன்ற வெளிப்பட்டாற்போல, இராவணன் கொடுமைக்கு
அஞ்சி மறைந்திருந்த கதிரவன் இராமன்  வருகையில்  மறைவிடம்
நீங்கி எழுந்தாற்போல் தோன்றினான்  எனத் தற்குறிப்பேற்ற அணி
திகழ உரைத்தார்.
  

(24)
 

வானர சேனை இலங்கையை வளைத்தல்
 

6970.

உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்கத்

தூர்ப்ப,

அளப்ப அருந் தூளிச் சுண்ணம் ஆசைகள

அலைக்க, பூசல்