தந்திரம்-படை வடசொல். "தந்திரக்கடலை நீத்தி" (கம்ப. 7340) என்பர் மேலும். கதிரவனே நிலா முதலியவற்றிற்கு ஒளி வழங்குபவன் ஆதலின், "தனிச்செஞ்சுடரோன்" எனப்பட்டான். |
(26) |
அரக்கர் சேனையை வளைத்தல் |
6972. | நூற் கடல் புலவராலும் நுனிப்ப அரும் வலத்தது |
| ஆய |
| வேற் கடல்-தானை ஆன விரி கடல் |
| விழுங்கிற்றேனும், |
| கார்க் கடல் புறத்தது ஆக, கவிக் கடல் வளைந்த |
| காட்சி, |
| பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது, அப் பதகன் |
| மூதூர். |
|
அப்பதகன் மூதூர் - அந்தப் பாதகனான இராவணனின் தொல்நகரமாகிய இலங்கை; கடல் நூல் புலவராலும் - கடல் போன்ற நூல்களைக் கற்ற புலமை நிறைந்தோராலும்; நுனிப்ப- நுண்ணிதின் உணர;அரும் வலத்தது ஆய- இயலாத வலிமை வாய்ந்ததாகிய; கடல் வேல் தானை ஆன- கடல் போன்று வேல் ஏந்திய படைத்தொகுதியான அரக்கர் சேனை ஆன; வரி கடல் விழுங்கிற்றேனும் - விரிந்த சமுத்திரத்தால் விழுங்கப் பெற்றிருந்தது ஆனாலும்;கார்க்கடல் புறத்தது ஆக- கரிய கடல் பக்கத்தே சுற்றி நிற்க; கவிக்கடல் வளைந்த காட்சி - வானரப் படையெனும் கடல் வளைத்து நிற்கும் காட்சியானது; பாற்கடல் அழுவத்து உள்ளது- பாற்கடற்பரப்பின் உள்ளே உள்ளது;ஒத்தது- (ஒரு நகரம்) போன்றிருந்தது. |
குரங்குச் சேனை பாற்கடலாகவும், அது சுற்றியுள்ள பெரிய அரக்கர் சேனை கருங்கடலாகவும் உருவகிக்கப்பட்டன. அழுவம் -பரப்பு, பதகன்-பாதகன்-கொடும்பாவம் புரிந்தவன்.பதகன் துரந்த உரகம் (கம்ப. 8264) "வெய்யன் பதகன் பரதார விருப்பன் வீணன்" (அரிச். 4. இந்திர.35) |
(27) |
6973. | அலகு இலா அரக்கன் சேனை அகப்பட, அரியின் |
| தானை, |
| வலைகொலாம் என்ன, சுற்றி வளைத்ததற்கு உவமை |
| கூறின், |