ஊழிக்காலத்தே உயிர்கள் ஓரிடத்தே ஒதுங்கும் கற்பனை, விவிலிய நூலில் கடல் கோளுக்குத் தப்பிய உயிர்கள் "நோவா" (நாவாய்) எனும் கப்பலில் ஒதுங்கிப் பிழைத்து மீண்டும் பெருகியதாக வருவதோடும், ஊழியின் முடிவில் திருமால் ஆலிலையில் பள்ளி கொண்டு உயிர்களைத் தன் வயிற்றில் அடக்குவதோடும் ஒரு சார் ஒப்பு நோக்கத்தக்கதாம். |