(தன் அருகிருந்த) வீடணனை நோக்கி; 'ஒள்ளியது உணர்ந்தேன்' என்று- (இப்போது செய்யத்தக்க) புகழுக்குரிய செய்கை ஒன்றை (இப்போதுதான்) உணர்ந்தேன் என்று; உரைப்பது ஆனான் - சொல்லத் தொடங்கினான். |
(1) |
6975. | 'தூதுவன் ஒருவன்தன்னை இவ் வழி விரைவில் |
| தூண்டி, |
| "மாதினை விடுதியோ?" என்று உணர்த்தவே, |
| மறுக்கும்ஆகின், |
| காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது; அறனும் |
| அஃதே; |
| நீதியும் அஃதே' என்றான்--கருணையின் நிலயம் |
| அன்னான். |
|
கருணையின் நிலயம் அன்னான் - உலகத்தில் உள்ள கருணையெல்லாம் நிலைத்திருக்கும் நிலையம் போன்றவனான இராமபிரான், (வீடணனை நோக்கி);இவ்வழி -இவ்விடத்திலிருந்து; தூதுவன் ஒருவன் தன்னை- ஒரு தூதுவனை; விரைவில் தூண்டி- (இராவணனிடம்) விரைவில் அனுப்பி; மாதினை விடுதியோ? - (இப்பொழுதாவது) 'சீதையை விடுதலை செய்கிறாயா?' என்று உணர்த்தவே- என வினவி (நாம் அவனுக்கு) அறிவுறுத்தினால்; மறுக்கும் ஆகின்- (இப்போதும் அவன்) (விடமுடியாது என) மறுப்பான் ஆகில்; காதுதல் கடன் என்று-(அவனை)அழித்தல் நம் கடமையென்று;உள்ளம் கருதியது - என் மனம் எண்ணிற்று;அறனும் அஃதே - (என் உள்ளம் கருதுவதே) அறம் ஆகும்; நீதியும் அஃதே என்றான் - அதுவே நீதியும் ஆகும் என்று கூறினான். |
'பன்னீர்க்குவளை பன்னீர் வாசனை தவிர வேறு என்தரக்கூடும்?' என்பது போல இறைவனுக்கு, 'கருணை இயல்பான குணம்; கோபம் வந்தேறி" என்பார் நம்பிள்ளை. கருணையின் நிலையம் அன்னான் - கருத்துடையடைகொளியணி. |
(2) |
வீடணன் முதலியோர் வரவேற்க, இலக்குவன் மறுத்தல் |
6976. | அரக்கர் கோன் அதனைக் கேட்டான், 'அழகிற்றே |
| ஆகும்' என்றான்; |
| குரக்கினத்து இறைவன் நின்றான், 'கொற்றவர்க்கு |
| உற்றது' என்றான்; |