| 'இரக்கமது இழுக்கம்' என்றான், இளையவன்; 'இனி, |
| நாம் அம்பு |
| துரக்குவது அல்லால், வேறு ஓர் சொல் உண்டோ? |
| என்னச் சொன்னான். |
|
அரக்கர் கோன் - அரக்கர்களின் மன்னனாக ஆக்கப் பெற்றுள்ள வீடணன்; அதனைக் கேட்டான் - இராமபிரான் கூறிய சொற்களைக் கேட்டு; அழகிற்றே ஆகும் என்றான் - நன்றாயுள்ளது என்று பாராட்டினான்; குரக்கினத்து இறைவன்- வானரங்களின் மன்னனாகிய சுக்கிரீவன்; நின்றான்- எழுந்து நின்றவனாய்; கொற்றவற்கு ஏற்றது என்றான்- (அரச தருமம் கடைப்பிடிக்கும்) வேந்தருக்கு ஏற்றதே இது என்றான்; இளையவன் - இளையோன் ஆகிய இலக்குவன்; இரக்கமது இனி இழுக்கு என்றான் - (அரக்கனிடம் இனி) இரக்கம் காட்டுவது இழுக்காகும் என்றான்;நாம் அம்பு துரக்குவது அல்லால் - நாம் இனி (அவ்வரக்கனிடம்) அம்பைச் செலுத்தி அம்பால் சொல்வது அன்றி; வேறு ஓர் சொல் உண்டோ?- (சொல்லால் பேசுவதற்கு) வேறு ஓர் சொல்லும் உண்டோ? என்னச் சொன்னான் - என்று வெகுண்டு கூறினான். |
தனக்கு அரசுரிமை வேண்டும் என்ற நினைவின்றித் தன் தமையனாகிய இராவணன் போரில் மாளாது இராமனால் உய்தி பெறவேண்டும் எனும் நினைவினனாகி, இராவணன் பால் தூதனுப்புவதனை, "அழகிற்றே ஆகும்" என மொழிந்த வீடணன் உள்ளத்தை அவ்விரண்டே சொற்கள் காட்டும். |
(3) |
6977. | 'தேசியைச் சிறையில் வைத்தான்; தேவரை |
| இடுக்கண் செய்தான்; |
| பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்; மன்னுயிர் புடைத்துத் |
| தின்றான்; |
| ஆசையின் அளவும், எல்லா உலகமும் தானே |
| ஆள்வான், |
| வாசவன் திருவும் கொண்டான்; வழி அலா வழிமேல் |
| செல்வான். |
|
தேசியைச் சிறையில் வைத்தான்- (நீ தூது விட நினைக்கும் அவ்வரக்கன் இராவணன்) கற்பின் ஒளி வடிவினளான பிராட்டியைச் சிறையில் (வஞ்சத்தால் கவர்ந்து) வைத்துள்ளான்; தேவரை இடுக்கண் செய்தான்- தேவர்கட்குச் (சொல்லொணாத்) |