| இருந்துழி வந்த நங்கை இருஞ்செவி முலையும் |
| மூக்கும் |
| அரிந்துழி, வந்திலாதான் இனிச் செய்யும் ஆண்மை |
| உண்டோ? |
|
பாட்டியாக்கை- பாட்டியாகிய தாடகையின் உடலை; பருந்து உ(ண்)ணப் படுத்தநாள் - பருந்துகள் தின்னும்படி கொன்ற நாளிலும்; மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் - அமிழ்தினும் இனியவனான தன் மாமன் சுபாகு (வீரரோடும்) இறந்து பட்ட நாளிலும்; வனத்துள் வைகி இருந்துழி - காட்டில் (பஞ்ச வடியில்) வாழ்ந்த காலத்தில்; வந்த நங்கை- அங்கு வந்த சூர்ப்பணகையின்; இருஞ்செவி முலையும் மூக்கும் - பெரிய காதுகளையும் மார்புகளையும் மூக்கையும்; அரிந்துழி- (இலக்குவன்) அரிந்து போட்ட நாளிலும்; வந்திலாதான் - போருக்கு வாராதவன்; இனிச் செய்யும் ஆண்மை உண்டோ?- இப்போது போரிட வந்து வீரம் காட்டுவது உண்டோ? (இல்லை) |
பாட்டி-தாடகை. மாமன்-சுபாகு. தாடகையின் மகன், மாரீசனின் சகோதரன். துயர்க்காலத்தே மருந்து போன்று வந்து தாயுடன் பிறந்த மாமன் உதவுவது இந்நாட்டுப் பண்பாதலால், "மருந்தினும் இனிய மாமன்" என்றான். |
(32) |
7006. | ' "கிளையொடும் படைஞரோடும், கேடு இலா |
| உயிர்கட்கு எல்லாம் |
| களை என, தம்பிமாரை வேரொடும் களையக் |
| கண்டும், |
| இளையவன் பிரிய மாயம் இயற்றி, ஆயிழையை |
| வௌவும் |
| வளை எயிற்று அரக்கன், வெம் போர்க்கு, இனி |
| எதிர் வருவது உண்டோ? |
|
கேடு இலா உயிர்கட்கு எல்லாம்- அழிவற்ற உலகத்து உயிர்களாகியவெல்லாம் (அழிப்பதற்கு); களை என- இவர்கள் களையாக உள்ளனர் என்று; தம்பிமாரைக் கிளையொடும் படைஞரோடும்- (கரன் முதலிய) தம்பியரைச் சுற்றத்தாரோடும்; சேனை வீரர்களோடும்; வேரொடும் களையக் கண்டும்- அடி முதலோடு அழித்துவிட்டதை அறிந்திருந்தும்; இளையவன் பிரிய- (நேரே வந்து போரிடும் துணிச்சலின்றி) என்னைவிட்டு |