இளையவன் பிரியுமாறு; மாயம் இயற்றி - வஞ்சனைச் செயல் புரிந்து, (அவன் அகன்ற சமயத்தில்); ஆயிழையை வௌவும் - சீதா தேவியைக் கவர்ந்து வந்த, வளை எயிற்று அரக்கன் - வளைந்த கோரப் பற்களையுடைய அந்த இராவணன், வெம்போர்க்கு - கொடிய யுத்தத்திற்கு, இனி எதிர் வருவது உண்டோ?- இனி மேல் எதிர்த்துச் சண்டையிட வருவது ஏது? |
(33) |
7007. | 'ஏந்திழைதன்னைக் கண்ணுற்று, எதிர்ந்தவர்தம்மை |
| எற்றி, |
| சாந்து எனப் புதல்வன்தன்னைத் தரையிடைத் |
| தேய்த்து, தன் ஊர் |
| காந்து எரி மடுத்து, தானும் காணவே, கடலைத் |
| தாவிப் |
| போந்த பின், வந்திலாதான் இனிப் பொரும் போரும் |
| உண்டோ? |
|
ஏந்திழை தன்னைக் கண்ணுற்று- (அனுமன்) சீதா தேவியைச் சந்தித்து; எதிர்ந்தவர்தம்மை எற்றி- அப்போது தன்னை எதிர்த்த (அத்தனை) வீரர்களையும் தாக்கி ஒழித்து; புதல்வன் தன்னை- அட்சய குமாரனை; சாந்து என-(குழைத்த) சாந்து போல் ஆகுமாறு; தரையிடைத் தேய்த்து- மண்ணில் இட்டுத் தேய்த்து; தானும் காணவே- தன் கண் முன்பே; தன்ஊர்-தனது இலங்கை மாநகரை; காந்து எரி மடுத்து- எரியும் நெருப்பிற்கு இரையாக்கி; கடலைத் தாவிப் போந்த பின்-கடலைத் தாண்டி வந்து அடைந்த பின்னரும்; வந்திலாதான்- (போருக்கு) வந்தடையாத இராவணன்; இனிப் பொரும் போரும்உண்டோ? - இனி மேல் செய்யப் போகின்ற போரும் உண்டோ? |
சந்தனக் குழம்பு போல் தரையில் தேய்க்கப்பட்டவன் இராவணன் மகனான, அக்ககுமாரன். (5705) |
(34) |
7008. | ' "உடைக் குலத்து ஒற்றர்தம்பால் உயிர் கொடுத்து |
| உள்ளக் கள்ளம் |
| துடைத்துழி, வருணன் வந்து தொழுதுழி, தொழாத |
| கொற்றக் |