| குடைத் தொழில் உம்பி கொள்ளக் கொடுத்துழி, |
| வேலை கோலி |
| அடைத்துழி, வந்திலாதான் இனி வர ஐயம் |
| உண்டோ? |
|
தொழாத கொற்றக் குடைத் தொழில் - (தன்னைப் பிறர் தொழுவது அல்லாமல் தான் பிறரைத்) தொழ வேண்டாத இலங்கை ஆட்சியை; உம்பி கொள்ளக் கொடுத்துழி- உன் தம்பி வீடணன் பெறக் கொடுத்த போதும்; வருணன் வந்து தொழுதுழி - விட்ட கணைக்கு ஆற்றாது வருணன் வந்து சரணம் அடைந்த போதும்; வேலை கோலி அடைத்துழி- கடலை வளைத்துச் சேது சமைத்த போதும்; குலத்து உடை ஒற்றர் தம் பால்- அரக்கர் குலத்தில் தோன்றிய ஒற்றர்களுக்கு; உயிர் கொடுத்து-உயிர்ப் பிச்சையளித்து; உள்ளக் கள்ளம் துடைத்துழி- அவர்களின் நெஞ்சத்திலிருந்த வஞ்சனையை அகற்றி அனுப்பிய போதும்; வந்திலாதான் - வாராதிருந்தவன்; இனி வர-இனி மேல் வருவான் என்று நினைக்கும்; ஐயம் உண்டோ? - ஐயப்பாட்டிற்கு இடம் உண்டோ? (இல்லை) |
ஒற்றர்களுக்கு உயிர்ப் பிச்சையளித்ததும், அவர்கள் தம் உள்ளத்து வஞ்சம் மாறி, இராவணனிடத்தே இராமன் புகழ் உரைத்ததும் ஒற்றுக் கேள்விப்படலத்துள் காண்க. |
(35) |
7009. | ' "மறிப்புண்ட தேவர் காண, மணி வரைத் தோளின் |
| வைகும் |
| நெறிப் புண்டரீகம் அன்ன முகத்தியர்முன்னே, |
| நென்னல், |
| பொறிப் புண்டரீகம் போலும் ஒருவனால், புனைந்த |
| மௌலி |
| பறிப்புண்டும், வந்திலாதான் இனிப் பொரும் பான்மை |
| உண்டோ?" |
|
மறிப்புண்ட தேவர் காண- (தன்னால் சிறையில்) அடைபட்ட தேவர்கள் எல்லாம் கண்டு கொண்டிருக்க;மணி வரைத்தோளின் வைகும் - அழகிய மலை போன்ற தோள்களில் தங்கும்; நெறிப்புண்டரீகம் அன்ன முகத்தியர் முன்னே - (மலரும்) ஒழுங்கினையுடைய தாமரை மலர் போன்ற முகங்களையுடைய தேவ மங்கையர்க்கு முன்பாக; நென்னல் - நேற்று; |