பொறிப்புண்டரீகம் போலும் ஒருவனால் - வரிகளையுடைய புலியினைப் போன்ற சுக்கிரீவனால்; புனைந்த மௌலி- தான் அணிந்திருந்த மகுட மணிகள்; பறிப்புண்டும்- பறிக்கப்பட்ட போதும்; வந்திலாதான் - போர் புரிய வாராத இராவணன்; இனிப் பொரும்பான்மை உண்டோ?- (இனி வெளிப்போந்து) போர்புரியும் தன்மை உள்ளவனோ? (இல்லை) |
(36) |
7010. | ' "என்று இவை இயம்பி வா" என்று ஏவினன் |
| என்னை; எண்ணி |
| ஒன்று உனக்கு உறுவது உன்னித் துணிந்து உரை; |
| உறுதி பார்க்கின், |
| துன்று இருங் குழலை விட்டு, தொழுது வாழ்; |
| சுற்றத்தோடும் |
| பொன்றுதிஆயின், என் பின், வாயிலில் புறப்படு' |
| என்றான். |
|
என்று இவை இயம்பி வா என்று - என்று மேலே கூறிய இந்தச் சொற்களை(உன்னிடம்) கூறி(உன் உளக்கருத்தினை அறிந்து) வா என்று; என்னை ஏவினன் - எனக்கு ஆணையிட்டான். (என் தலைவன் இராமன்); எண்ணி - மேலே கூறியவற்றை எல்லாம் சிந்தித்து; உனக்கு உறுவது ஒன்று உன்னி - உனக்குத் தக்கது ஒன்றைக் கருதி; துணிந்து உரை - துணிந்து (எனக்கு) உரைப்பாயாக; உறுதி பார்க்கின்- உனக்கு உறுதி பயப்பது எனச் சிந்திப்பாயானால்;துன்று இருங்குழலை விட்டு- நெருங்கியுயர்ந்த கூந்தலைக் கொண்ட சீதா தேவியினைச் சிறையிலிருந்தும் விடுவித்து; தொழுது வாழ்- இராமபிரானை வணங்கி (நீ நீடு) வாழ்வாயாக; சுற்றத்தோடும்பொன்றுதியாகில் - உன் உறவினர் அனைவரோடும் (சேர்ந்து) மடிய விரும்பினாய் ஆகில்; என்பின்- என்னைப் பின் தொடர்ந்து; வாயிலில் புறப்படு- இலங்கையரண்மனை வாசலைவிட்டுப் (போர் புரியப்)புறப்படுவாயாக; என்றான். |
(37) |
7011. | 'நீரிலே பட்ட, சூழ்ந்த நெருப்பிலே பட்ட, நீண்ட |
| பாரிலே பட்ட, வானப் பரப்பிலே பட்ட, எல்லாம் |