பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 619

போரிலே பட்டு வீழப் பொருத நீ, "ஒளித்துப் புக்கு,

உன்

ஊரிலே பட்டாய்" என்றால், பழி' என, உளையச்

சொன்னான்.

 

நீரிலே பட்ட  -  தண்ணீரில்  தோன்றியவர்களும்; சூழ்ந்த
நெருப்பிலே பட்ட- வளைந்து எரிகின்ற நெருப்பிலே  தோன்றிய
உயிர்களும்; நீண்ட பாரிலே பட்ட - பரந்த  பூமியில் தோன்றிய
உயிர்களும்; வானப் பரப்பிலே   பட்ட -  ஆகாய வெளியிலே
தோன்றிய உயிர்களும்; எல்லாம் - ஆகிய  எல்லா   உயிர்களும்;
போரிலே பட்டு வீழ
-  போர்க்களத்திலே    மடிந்து  வீழுமாறு;
பொருத நீ
- போரிட்ட நீ; (இப்பொழுது) உன் ஊரிலே ஒளித்துப்
புக்குப் பட்டாய்
என்றால்- உன்னுடைய ஊராகிய இலங்கைக்குள்
புகுந்து கொண்டு ஒளிந்திருக்கையில் மாண்டாய் என்று சொன்னால்;
பழி
- உனக்கு  அது  (பெரும்)  பழியாய்  முடியும்;  என- என்று;
உளையச்
சொன்னான் -   இராவணன்   மனம்  புண்ணாகுமாறு
மொழிந்தான் (அங்கதன்)
 

(38)
 

இராவணன் அங்கதனை எற்றப் பணித்தல்
 

கலிவிருத்தம்
 

7012.

சொற்ற வார்த்தையைக் கேட்டலும், தொல் உயிர்

முற்றும் உண்பது போலும் முனிவினான், 

'பற்றுமின், கடிதின்; நெடும் பார்மிசை 

எற்றுமின்' என, நால்வரை ஏவினான். 

 

சொற்ற  வார்த்தையைக் கேட்டலும்- (இவ்வாறு அங்கதன்)
கூறிய வார்த்தைகளைக்   கேட்டவுடனே   (இராவணன்);   தொல்
உயிர்   முற்றும் 
- பழமையான  உயிர்களையெல்லாம்; உண்பது
போலும்     முனிவினான்  
-    விழுங்கி  விடுவான் போன்ற
சினமுடையவனாய்;   கடிதின்   பற்றுமின் - (இந்தக் குரங்கினை)
விரைந்து பிடியுங்கள்; நெடும்பார் மிசை எற்றுமின்- நீண்டு பரந்த
பூமியின் மீது மோதுங்கள்; என நால்வரை   ஏவினான்-  என்று
நான்கு பேர்க்கு ஆணையிட்டான்.
 

(39)