இராமனிடம் அங்கதன் செய்தியுரைத்தல் |
7015. | அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான், அவர் |
| சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான், |
| இந்து விண்நின்று இழிந்துளதாம் என, |
| வந்து, வீரன் அடியில் வணங்கினான். |
|
சிந்து ரத்தம் - சிந்திய உதிரத்தினால்; துதைந்து எழும் செச்சையான் - நெருங்கித் தோன்றிய செஞ்சந்தனம் போன்ற பூச்சுக்களையுடைய அங்கதன்; அந்தரத்திடை- ஆகாயத்தினில்; ஆர்த்தெழுந்தான் - ஆர்ப்பரித்தவாறு எழுந்தானாகி; விண்ணின்று - ஆகாயத்திலிருந்து; இந்து இழிந்துளது ஆம் என- சந்திரன் (பூமியில்) இறங்கியது என்று(கண்டோர் கருதுமாறு); வந்து வீரன் அடியில் வணங்கினான் - வந்து இராமபிரானின் திருவடிகளை வணங்கி நின்றான். |
(42) |
7016. | உற்ற போது, 'அவன் உள்ளக் கருத்து எலாம்,' |
| கொற்ற வீரன், 'உணர்த்து' என்று கூறலும், |
| 'முற்ற ஓதி என்? மூர்க்கன், முடித் தலை |
| அற்றபோது அன்றி, ஆசை அறான்' என்றான். |
|
உற்றபோது - (அங்கதன்) வந்தடைந்த பொழுதில்; கொற்ற வீரன்- வெற்றி வீரனாகிய இராமன்; அவன் உள்ளக் கருத்து எலாம் - அந்த இராவணனுடைய மனக்கருத்தையெல்லாம்; உணர்த்துஎன்று கூறலும் - (எனக்குத்) தெரிவிப்பாயாக என்று கூறியவுடன்; முற்ற ஓதி என்- (அங்கதன்) (அந்த அரக்கன் நிலையை) முழுவதும் விரித்துக் கூறி என்ன பயன்? மூர்க்கன்- அந்தக் கொடியோன்; முடித்தலை அற்ற போது அன்றி- அவனுடைய மகுடம் சூடிய (பத்துத்) தலைகளுள் அறுபட்டு (மண்ணில் வீழ்ந்தாலன்றி); ஆசையறான் - அவன் ஆசை நீங்கான் என்றான்.... |
சொற் சுருக்கமும் பொருட் பெருக்கமும் அமைய உரையாடுந் திறத்துக்கு, இங்கு இராமனும் அங்கதனும் உரையாடியுள்ள திறத்தைச் சான்றாகக் கொள்ளலாம். "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா" ஆதலின், கொண்ட ஆசையைக் குலம் அழியினும் விடாத இராவணனை "மூர்க்கன்" என்றார். |
(43) |