பக்கம் எண் :

624யுத்த காண்டம் 

வானரப்படை அகழியைத் தூர்த்தல்.
 

7020.

தடங் கொள் குன்றும் மரங்களும் தாங்கியே,

மடங்கல் அன்ன அவ் வானர மாப் படை, 

இடங்கர் மா இரிய, புனல் ஏறிட, 

தொடங்கி, வேலை அகழியைத் தூர்த்ததால். 

 

தடம் கொள் குன்றும் மரங்களும் - பெரிய மலைகளையும்,
மரங்களையும்;   தாங்கிய -  ஏந்திச்  சென்று; மடங்கல் அன்ன
- சிங்கத்தைப்   போன்ற;    அவ்வானரப்படை- அந்தப் பெரிய
குரங்குச்    சேனை;   இடங்கர் இரியப் புனல் ஏறிட- முதலை
போன்ற நீர் வாழ் உயிர்கள் நிலை கெட்டோடவும்;  அகழி    நீர்
தளும்பி வழியவும்' தொடங்கி - பணியினைத் தொடங்கி; வேலை
அகழியைத் தூர்த்தது
- கடல் போன்ற அகழியைத் தூர்த்தது.
 

அகழியில்   கற்களும்   மரங்களும் விழுந்தபொழுது, அகழிநீர்
வழிவதனை, "புனல் ஏறிட" என்றார்.
 

(4)
 

7021.

ஏய வெள்ளம் எழுபதும், எண் கடல்

ஆய வெள்ளத்து அகழியைத் தூர்த்தலும், 

தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என 

வாயிலூடு புக்கு, ஊரை வளைந்ததே. 

 

எண்கடல்   ஏய   வெள்ளம்  எழுபதும்  - எட்டாம்கடல்
போன்று  விரிந்துள்ள   எழுபது  வெள்ளம்   குரங்குப்  படையும்;
வெள்ளத்து
  ஆய   அகழியை  -  நீர்ப்  பெருக்கைக் கொண்ட
அகழியை;       தூர்த்தலும்   -   (மலைகளாலும் மரங்களாலும்)
 நிரப்பும்போது;  தூய    வெள்ளம் - தூய்மையான வெண்ணிறம்
கொண்ட அந்த வெள்ள நீரானது; துணை செய்வது ஆம் என-
(இராமபிரானுக்கு) உதவி  புரிவதைப் போன்று; வாயில் ஊடு புக்கு
ஊரை வளைத்தது
  - இலங்கை   மாநகரின்  வாயில்கள் வழியாக
உள்ளே புகுந்து ஊரை வளைத்துக் கொண்டது.
 

(5)
 

7022.

விளையும் வென்றி இராவணன் மெய்ப் புகழ் 

முளையினோடும் களைந்து முடிப்பபோல், 

தளை அவிழ்ந்த கொழுந் தடந் தாமரை 

வளையம், வன் கையில், வாங்கின--வானரம்.