பக்கம் எண் :

 கடல் காண் படலம் 3

1. கடல் காண் படலம்
 

எழுபது வெள்ளம் வானர சேனை சூழ, இராமபிரான்  கடலைக்
காணுதலும்  -   பிராட்டியின்  நினைவால் வருந்துதலும் - கடலின்
தோற்றமும் - மேல்விளைவை   எண்ணி இராமபிரான் சிந்தித்தலும்
இப்படலத்துள் கூறப்படும் செய்திகளாகும்.
 

வானரப் படை கடற்கரையை அடைதல்
 

6060.

ஊழி திரியும் காலத்தும் உலையா

நிலைய உயர் கிரியும்,

வாழி வற்றா மறி கடலும், மண்ணும்,

வட பால் வான் தோய,

பாழித் தெற்கு உள்ளன கிரியும் நிலனும்

தாழ, பரந்து எழுந்த

ஏழு-பத்தின் பெரு வெள்ளம் மகர

வெள்ளத்து இறுத்ததால்.

 

வடபால்- வடதிசையின்    கண்  உள்ள; ஊழி திரியும்
காலத்தும்- உலகம் அழியும் பிரளய  காலத்திலும்; உலையா
நிலைய உயர் கிரியும்  
-     அழியாத தன்மை வாய்ந்த
மேருமலையும்; வற்றா மறிகடலும்- என்றும் வற்றாத அலை
மடங்கி வரும் கடலும்; மண்ணும் - நிலமும் ; வான் தோய-
வானளவ    மேல்  எழும்படியும்;   பாழி தெற்கு உள்ளன
கிரியும்
- பெரிய தென் திசையிலுள்ள  மலைகளும்; நிலனும்
தாழ
- நிலமும் தாழ்ந்து போகும்படியும்; பரந்து    எழுந்த-
எங்கும் பரவி   எழுந்த; ஏழுபத்தின்   பெரு வெள்ளம் -
எழுபது வெள்ளம்    அளவுடைய   வானரசேனை;    மகர
வெள்ளத்து இறுத்தது
- மீன்களை உடைய   நீர்மிக்க தென்
கடற்கரையை அடைந்தது.
 

பாழி-பெருமை; வெள்ளம்-ஒரு பேரெண்; சமுத்திரம் எட்டுக்
கொண்டது வெள்ளம் எனப்படும் என்பர். ஆல்:அசை.
 

(1)
 

6061.

பொங்கிப் பரந்த பெருஞ் சேனை,

புறத்தும் அகத்தும், புடை சுற்ற-