| சங்கின் பொலிந்த தகையாளைப் |
| பிரிந்த பின்பு, தமக்கு இனம் ஆம் |
| கொங்கின் பொலிந்த தாமரையின் |
| குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும் |
| கங்குல் பொழுதும், துயிலாத |
| கண்ணன்-கடலைக் கண்ணுற்றான். |
|
பொங்கிப் பரந்த - மிகுந்து பரவிய;பெருஞ்சேனை - பெரிய படை;புறத்தும் அகத்தும் புடை சுற்ற- எங்கும் சூழ; சங்கின் பொலிந்த தகையாளை - சங்கினாலியளன்ற வளைகளை அணிந்த தகைமை உடையவளாகிய சீதா பிராட்டியை;பிரிந்த பின்பு- பிரிந்த பிறகு;தமக்கு இனமாம் - தங்களுக்கு இனமாகிய; கொங்கில் பொலிந்த தாமரையின் குழுவும் - தேன் மிகுந்த தாமரைப் பூக்களின் தொகுதியும்; துயில்வுற்று - உறங்கி; இதழ்குவிக்கும் - இதழ்கள் குவிந்திருக்கும்; கங்குல் பொழுதும் - இரவு நேரத்திலும்; துயிலாத கண்ணன் - சீதையின் பிரிவால் வருந்தி உறங்காத கண்களை உடைய இராமபிரான்; கடலைக் கண்ணுற்றான் - தென் திசைக் கடலைக் கண்டான். |
(2) |
6062. | 'சேய காலம் பிரிந்து அகலத் |
| திரிந்தான், மீண்டும் சேக்கையின்பால், |
| மாயன், வந்தான்; இனிவளர்வான்' |
| என்று கருதி, வரும் தென்றல் |
| தூய மலர்போல் நுரைத் தொகையும் |
| முத்தும் சிந்தி, புடை சுருட்டிப் |
| பாயல் உதறிப் படுப்பதே ஒத்த- |
| திரையின் பரப்பு அம்மா |
|
திரையின் பரப்பு - கடல் அலைகளின் பரப்புகள்;மாயன் சேயகாலம் பிரிந்து - திருமால் நீண்ட காலம் தம்மைப் பிரிந்து;அகலத் திரிந்தான் - விலகித் திரிந்தவன்; மீண்டும் சேக்கையின் பால்-மீண்டும் படுக்கைக்கு; வந்தான்-வந்தான்; இனி வளர்வான் - இனி நம்மிடம் உறங்குவான்;என்று கருதி - என்று நினைந்து;வரும் தென்றல் - உலவும் தென்றல் காற்றானது; தூய மலர்போல் நுரைத்தொகையும் - தூய மலரை ஒத்த வெண்மையான நுரைத் தொகுதியையும்;முத்தும் சிந்தி - முத்துக்களையும் சிந்தி; புடை |