பக்கம் எண் :

 கடல் காண் படலம் 5

சுருட்டி - பக்கத்தே சுருட்டி; பாயல்    உதறி- படுக்கையை
உதறி; படுப்பதே  ஒத்த- விரிப்பதை ஒத்தன.
  

அம்மா-வியப்பிடைச்சொல். வளர்தல்-கண்ணுறங்குதல்.
 

(3)
 

6063.

வழிக்கும் கண்ணீர் அழுவத்து

வஞ்சி அழுங்க, வந்து அடர்ந்த

பழிக்கும் காமன் பூங் கணைக்கும்

பற்றா நின்றான் பொன் தோளை,

சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில்

துள்ளும் பொறியின் சுடும், அன்னோ -

கொழிக்கும் கடலின் நெடுந் திரைவாய்த்

தென்றல் தூற்றும் குறுந் திவலை.

 

வழிக்கும் கண்ணீர்   அழுவத்து - வடிக்கும் கண்ணீர்க்
கடலிடையே; வஞ்சி அழுங்க- வஞ்சிக்கொடி    போன்ற சீதை
வருந்துவதால்; வந்து அடர்ந்த- வந்து பொருந்திய;  பழிக்கும்
காமன் பூங்கணைக்கும் 
-   பழிக்கும்   மன்மதனது    மலர்
அம்புகளுக்கும்;  பற்றா   நின்றான்   -    இலக்காகி  நின்ற
இராமபிரானுடைய; பொன் தோளை   -  அழகிய தோள்களை;
கொழிக்கும்    கடலின்   -    ஆர்ப்பரிக்கின்ற    கடலின்;
நெடுந்திரைவாய்- பெரிய அலைகளினின்று கொண்டு; தென்றல்
தூற்றும்   குறுந்திவலை 
-    தென்றல் காற்று தூற்றும் சிறிய
நீர்த்திவலைகள்;    சுழிக்கும்    கொல்லன் ஒல் உலையில்-
சுழன்று எரிகின்ற கொல்லனது உலையிலிருந்து எழுந்து; துள்ளும்
பொறியின் சுடும்
- துள்ளி வரும் நெருப்புப் பொறி போலச் சுடும்.
  

வழிக்கும் -  வடிக்கும்   அழுவம்-கடல் அழுங்க - வருந்த
பற்று-இலக்கு சுழிக்கும்-சுழன்று எரியும் கொழிக்கும் - ஆர்க்கும்
வஞ்சி    அழுங்க   வந்து  அடர்ந்த பழியாவது "மனைவியைப்
பாதுகாக்கத்    தவறிவிட்டானே"    என்று உலகம் கூறும் பழிச்
சொல்லாம். அன்னோ-அந்தோ, இரக்கக் குறிப்பு. 
 

(4)
 

6064.

நென்னல் கண்ட திருமேனி 

இன்று பிறிது ஆய், நிலை தளர்வான்-

தன்னைக் கண்டும், இரங்காது

தனியே கதறும் தடங் கடல்வாய்,

பின்னல் திரைமேல் தவழ்கின்ற

பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும்