| புன்னைக் குறும் பூ நறுஞ் சுண்ணம் |
| பூசாது ஒருகால் போகாதே. |
|
நென்னல் கண்ட திருமேனி- நேற்றுப் பார்த்த அழகிய உடம்பு; இன்று பிறிதாய்- இன்று வேறுபட்டதாகி; நிலை தளர்வான் தன்னைக் கண்டும்- தனது நிலை தளர்பவனாகிய இராமபிரானது நிலைமையைப் பார்த்தும்; இரங்காது தனியே கதறும் தடங் கடல்வாய்- மனம் இரங்காமல் தனியே நின்று கதறுகின்ற பெரிய கடலின்கண்; பின்னல் திரை மேல் - பின்னி இணைந்தியங்கும் அலைகளின்மேல்; தவழ்கின்ற பிள்ளைத் தென்றல் - தவழ்ந்து வருகின்ற சிறிய தென்றலானது; கள் உயிர்க்கும் - தேனைப் பிலிற்றும்; புன்னைக் குறும்பூ நறுஞ்சுண்ணம் - புன்னையினது சிறியபூவின் மணமுடைய சுண்ணத்தை; பூசாது ஒரு கால் போகாது- இராமன் மீது ஒரு காலும் பூசாமல் போகாது (பூசியே செல்லும்). |
நென்னல் - நேற்று. பிள்ளைத்தென்றல் என்பதற்கேற்பத் தவழ்ந்து என்று கூறினார். |
(5) |
6065. | சிலை மேற்கொண்ட திரு நெடுந் தோட்கு |
| உவமை மலையும் சிறிது ஏய்ப்ப, |
| நிலை மேற்கொண்டு மெலிகின்ற |
| நெடியோன் தன்முன், படி ஏழும் |
| தலை மேல் கொண்ட கற்பினாள் |
| மணி வாய் என்ன, தனித் தோன்றி, |
| கொலை மேற்கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் |
| கூற்றம் கொல்லோ-கொடிப் பவளம்? |
|
கொடிப் பவளம் - கடற்கரையிலே படர்ந்துள்ள கொடிப்பவளம்; சிலை மேல் கொண்ட - வில்லைத் தாங்கி இருக்கின்ற; திரு நெடும் தோட்கு- அழகிய நீண்ட தோளுக்கு; உவமை மலையும் சிறிது ஏய்ப்ப - மலையும் சிறிது உவமையாகும்படி; நிலை மேற்கொண்டு- நிற்கும் நிலையினை மேற்கொண்டு; மெலிகின்ற நெடியோன்தன் முன்- மெலிகின்ற நீண்டவனான இராமபிரான்முன்; படி ஏழும் - ஏழுலகங்களும்; தலைமேல் கொண்ட கற்பினாள் - தலைமேல் கொண்டு போற்றும் கற்புடைய சீதா பிராட்டியின்; மணிவாய் என்ன - அழகிய வாயைப்போல;தனி தோன்றி- தனியே தோற்றமளித்து; கொலை |