பக்கம் எண் :

8யுத்த காண்டம் 

 

தந்த பாவை, தவப் பாவை,

 

தனிமை தகவோ?' எனத் தளர்ந்து,

 

சிந்துகின்ற நறுந் தரளக் கண்ணீர்

 

ததும்பி, திரைத்து எழுந்து,

 

வந்து, வள்ளல் மலர்த் தாளின்

 

வீழ்வது ஏய்க்கும்-மறி கடலே.

 

மறிகடல்- மடிந்து எழும் அலைகளை உடைய கடலே! இந்து
அன்ன   நுதல்  பேதை 
-   பிறைச்   சந்திரனைப்  போன்ற
நெற்றி  உடைய சீதை;  இடர்  நீங்கா  இருந்தாள்  -  நீங்காத
துன்பத்திலே    இருந்தாள்;   கொடியேன்   தந்த    பாவை-
கொடியேனாகிய  நான்   பெற்ற   பாவை   போன்றவரும்; தவப்
பாவை 
-    தவப்  பயனால் பிறந்த வருமாகிய சீதை;  தனிமை
தகவோ?
- (அரக்கருக்கிடையே  தனி இருந்து வருவது தகுமோ?
எனத் தளர்ந்து
-   என்று     மனம்    தளர்ந்து; சிந்துகின்ற
நறுந்தரளம்
-  சிந்துகின்ற    நல்ல முத்துக்க ளாகிய; கண்ணீர்
ததும்பி 
-   கண்ணீர் பொங்கி   திரைத்து  எழுந்து  வந்து-
அலைகளாகிய   கைகளை  விரித்துக் கொண்டு  எழுந்து  வந்து;
வள்ளல்    மலர்த்     தாளில்- வள்ளலாகிய இராமபிரானது
மலர்போன்ற  திருவடிகளில்;   வீழ்வது ஏய்க்கும்  - விழுந்து
முறையிடுவதை நிகர்க்கும்.
 

பாற்கடலில்   பிறந்த   திருமகளே   சீதையாதலால்  கடல்
'கொடியேன் தந்த   பாவை'   எனக்  கூறியது.     தன்  மகள்
துயரத்தால்   வருந்தக்    கண்டும்     தான்  எதுவும்  செய்ய
இயலாமையைச்    சுட்ட     'கொடியேன்'    எனக்   கூறியது
பொருத்தமே.   தரளக் கண்ணீர் உருவகம். இந்து-பிறைச்சந்திரன்
இது     முதல்  மூன்று   பாடல்கள்   கடலின்    தோற்றத்தை
விவரிப்பவையாம்.
 

(8)
 

6068.

பள்ளி அரவின் பேர் உலகம்

பசுங் கல் ஆக, பனிக் கற்றைத்

துள்ளி நறு மென் புனல் தெளிப்ப,

தூ நீர்க் குழவி முறை சுழற்றி,

வெள்ளி வண்ண நுரைக் கலவை,

வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு

அள்ளி அப்ப, திரைக் கரத்தால்

அரைப்பது ஏய்க்கும்-அணி ஆழி.