அணி ஆழி - அழகிய அந்தக் கடல்; வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு - (சீதையின் பிரிவால்) வெதும்பும் இராமன் திருமேனியில் (அந்த வெப்பம் தீர); அள்ளி அப்ப- அள்ளிப் பூசுவதற்காக; பள்ளி அரவில் பேருலகம்- திருமாலின் படுக்கையாகிய பாம்பின் முடிமீது தங்கிய பெரிய உலகமே; பசும் கல்லாக - சந்தனம் அரைக்கும் கல்லாக; பனிக்கற்றைத் துள்ளி நறுமென் புனல் தெளிப்ப- திரண்ட பனித்துளிகளாகிய மெல்லிய நீரைத் தெளித்த; தூநீர் குழவி முறை சுழற்றி - தூய நீராகிய குழவியை முறையே சுழற்றி; வெள்ளி வண்ண நுரைக கலவை - வெண்ணிறம் கொண்ட நுரையாகிய சந்தனத்தை; திரைக் கரத்தால்- அலைகளாகிய கைகளால்; அரைப்பது ஏய்க்கும் - அரைப்பது போலத் தோன்றும். |
கடல் - சந்தனம் அரைப்பவன், அலைகள் - கைகள் உலகம் - சந்தனம் அரைக்கும் கல், பனி - நீர் தெளிப்பவன், பனித்துளி - நீர்த்துளி மறிந்துவரும் கடல் நீர் - குழவி; நுரை - கலவைச் சந்தனம் என உருவகித்திருப்பது சுவைத்து மகிழ்தற்குரியது பள்ளி அரவு-ஆதி சேடன். |
(9) |
6069. | கொங்கைக் குயிலைத் துயர் நீக்க, |
| இமையோர்க்கு உற்ற குறை முற்ற, |
| வெங் கைச் சிலையன், தூணியினன், |
| விடாத முனிவின் மேல்செல்லும |
| கங்கைத் திரு நாடு உடையானைக் |
| கண்டு, நெஞ்சம் களி கூர, |
| அம் கைத் திரள்கள் எடுத்து ஓடி, |
| ஆர்த்தது ஒத்தது-அணி ஆழி. |
|
அணி ஆழி- அந்த அழகிய கடல்; கொங்கைக் குயிலை- மார்பகங்களை உடைய குயில் போன்றவளான சீதா பிராட்டியை; துயர் நீக்க-அவளுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கவும்; இமையோர்க்கு - தேவர்களுக்கு; உற்ற குறை முற்ற- உண்டான குறையை முடித்து வைக்கவும்; வெங்கைச் சிலையன் - கையிலே பகைவர்க்குப் பயத்தைத் தோற்றுவிக்கும் வில்லைப் பிடித்தவனாய்; தூணியினன் - அம்பறாத்தூணியையும் தாங்கியவனாய்; விடாத முனிவின் மேற்செல்லும் - நீங்காத கோபத்தோடு பகைவர் மேற்செல்லும்; கங்கைத் திருநாடு |