பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 11

2. இராவணன் மந்திரப்படலம்
 
 

எரியுண்ட   இலங்கையை   மயன்  புதுப்பித்தலும்,  இராவணன்
ஆலோசனை மண்டபத்தில் வீற்றிருத்தலும்,  முனிவர்  முதலியோரை
விலக்குவதும்,  எல்லாத்திசைகளிலும்    வீரர்களைக்     காவலுக்கு
நிறுத்துவதும்,  இராவணன் பேசுவதும்,  படைத்தலைவர்  பேசுவதும்,
கும்பகருணன்    கூற்றும்,    அதற்கு   இராவணன்    இசைவதும்,
இந்திரசித்து 'வென்று வருவேன்' என்று கூறுவதும், அவன் கூற்றைக்
கண்டித்து வீடணன்  பேசுவதும்-வீடணன்  இராவணனுக்கு  மேலும்
சில   உறுதி  மொழிகளைக்  கூறுவதும்  இராவணன்  மறுமொழியும்
வீடணன்     இரணியனது    சரிதம்     கூறத்    தொடங்குவதும்
இப்படலத்துள் கூறப்பட்டுள்ள செய்திகளாகும்.
 

எரியுண்ட இலங்கையை மயன் புதுப்பித்தல்
 

கலிவிருத்தம
 
  

6071.

பூ வரும் அயனொடும் புகுந்து, 'பொன் நகர்,

 

மூவகை உலகினும் அழகு முற்றுற,

 

ஏவு' என இயற்றினன் கணத்தின் என்பரால்-

 

தேவரும் மருள்கொள, தெய்வத் தச்சனே.
 

பூவரும்  அயனொடும்  புகுந்து -  இராவணன்,  திருமாலின்
உந்திக்  கமலத்தில்    தோன்றிய  பிரமனோடும் இலங்கை நகருள்
புகுந்து பிரமனைப் பார்த்து;  பொன்னகர் - அழகிய   நகரமாகிய
இலங்கையை; மூவகை  உலகினும்- மூன்று உலகங்களிலும் உள்ள
நகரங்களைவிட;அழகு   முற்றுற  -  சிறந்த  அழகு    முழுதும்
பொருந்துமாறு    அமைய;    ஏவு  என - கட்டளை இடுவாயாக
என்று கூற அந்தப் பிரம தேவன் கட்டளைப்படி;  தெய்வத்தச்சன்
- தெய்வ  உலகின்  தச்சனாகிய  மயன்; தேவரும் மருள்  கொள
- தேவர்களும்   பார்த்து   மயங்கும்படி;   கணத்தின்  -  நொடிப்
பொழுதுக்குள்;  இயற்றினன்  என்பர்  -  இலங்கையைச்   செய்த
மைத்தான் என்பார்கள்.
 

'மன்னன்   அயனொடும்   புகுந்து   மன்னன்  -  இராவணன்.
அடுத்த   பாட்டிலிருந்து   கொள்ளப்பட்டது.   மூவகை    உலகு-
விண்ணுலகு,