மண்ணுலகு, கீழ்உலகு என்பனவாம். முற்றுற-முற்றும் உற என்பதன் உம்மை
தொக்கது. நிரம்ப என்றுமாம். வான்மீகத்தில் இலங்கையை மீண்டும் அமைத்தது
கூறப்படவில்லை. நினைத்த நினைப்பால் படைத்தல் வல்லவன் தெய்வதச்சன்
என்பதால் 'கணத்தின் இயற்றினன்' என்றார். |
(1) |
இராவணன் சினம் நீங்குதல் |
6072. |
பொன்னினும் மணியினும் அமைந்த பொற்புடை |
|
நல் நகர் நோக்கினான், நாகம் நோக்கினான், |
|
'முன்னையின் அழகு உடைத்து!' என்று, மொய் கழல் |
|
மன்னனும், உவந்து, தன் முனிவு மாறினான். |
|
மொய்கழல் மன்னன் - வீரக்கழலணிந்த இராவணன்; பொன்னினும்
மணியினும் அமைந்த பொற்புடை - பொன்னாலும் மணிகளாலும்
அமைக்கப்பட்ட அழகுடைய; நல்நகர் நோக்கினான் - நல்ல
நகராகிய இலங்கையைப் பார்த்தான்; நாகம் நோக்கினான் -
தேவர் தலைநகராகிய அமராவதியைப் பார்த்தான்; முன்னையின்
அழகுடைத்து- முன்பிருந்ததை விடவும் அழகுடையதாய்
அமைந்துள்ளது; என்று உவந்து - என்று கூறி மகிழ்ந்து;
தன் முனிவு மாறினான்- கோபம் நீங்கினான்; |
மொய்கழல் - கால்களில் செறிந்த வீரக்கழல். "மன்னனும் நகர்
நோக்கினான் முனிவு மாறினான்" என இயையும். முனிவு- அனுமன்
இலங்கையை எரித்ததால் எழுந்த கோபம். நாகம்- விண்ணுலகம் இங்கு
ஆகுபெயராய் அமராவதியை உணர்த்தியது. 'நாகம் நோக்கினான்
நல்நகர் நோக்கினான்' என்றது அமராவதியை இலங்கையுடன்
ஒப்பிட்டுப் பார்த்து அதனிலும் இலங்கை அழகு மிக்கது என்று
அறிந்து மகிழ்ந்தான் என்பது கருத்து. |
(2) |
6073. | முழுப்
பெருந் தனி முதல் உலகின் முந்தையோன |
|
எழில் குறி காட்டி நின்று, இயற்றி ஈந்தனன்;- |
|
பழிப்ப அரும் உலகங்கள் எவையும் பல் முறை |
|
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிது |
|
உண்டாகுமோ? |
|
|
முழுப்பெரும் தனி முதல் - முழுமையான பெரிய ஒப்பற்ற தலைவனும்;
உலகின் முந்தையோன் - உலகம் தோன்றுவதற்கு முன்னமே
தோன்றியவனுமான பிரமதேவன்; எழிற்குறி காட்டி |