நின்று - அழகுக்குரிய நெறி முறைகளை மயனுக்குக் காட்டி நின்று; இயற்றி ஈந்தனன் - அந்த மயனால் இலங்கையை அழகுற அமைக்கச் செய்து தந்தான்; பழிப்பரும் உலகங்கள் எவையும் - பழித்தற்கரிய உலகங்கள் எல்லாவற்றையும்; பன்முறை அழித்து அழித்து ஆக்குவாற்கு - பல முறையும் அழித்துப் படைக்கும் திறமுடைய பிரமனுக்கு; அரிது உண்டாகுமோ? - செய்தற்கு அரிய செயல் எதுவும் உண்டோ? (இல்லை என்பது கருத்து) |
உலகங்கள் எல்லாவற்றையும் படைப்பவன் ஆதலால் 'முழுப் பெரும் தனிமுதல்' என்றார். உலகம் தோன்றுவதற்கு முன்னே தோன்றியவன் என்பதால் 'உலகின் முந்தையோன்' என, பிரமனைச் சிறப்பித்தார். எழிற்குறி-அழகுக்குரிய வரையறை. இலங்கை எழிலுக்குக் காரணம் உலகின் முந்தையோனான பிரமனே மயனுக்கு எழிற் குறிகாட்டி இயற்றச் செய்ததே. இப்பாடலைக் கவிக்கூற்று என்பர்; இராவணன் கூற்று எனினும் பொருந்தும்.
|
(3) |
இராவணன் பிரமனைப் பூசித்து அனுப்புதல் |
6074. | திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய, |
| பொரு கழல், இராவணன் அயற்குப் பூசனை |
| வரன்முறை இயற்றி, 'நீ வழிக்கொள்வாய்' என்றான்- |
| அரியன தச்சற்கும் உதவி, ஆணையால். |
|
திருநகர் முழுவதும் - அழகிய இலங்கை மாநகர் முழுவதையும்; திருந்த நோக்கிய பொருகழல் இராவணன் - திருத்தமுற நன்கு நோக்கிய வீரக்கழலணிந்த கால்களை உடைய இராவணன்; அயற்கு பூசனை வான்முறை இயற்றி - பிரமனுக்குச் செய்யவேண்டிய வழிபாடுகளை முறைப்படி செய்து;அரியன தச்சற்கும் ஆணையான் உதவி - தெய்வத் தச்சனாகிய மயனுக்கும் அரிய பல பொருள்களைத் தனது ஆணையால் தந்து; நீ வழிக்கொள்வாய் என்றான் - நீ உன்னிருப்பிடத்துக்குச் செல்வாயாக என்று கூறி வழியனுப்பினான். |
பொருகழல் - பொருந்திய கழல். தச்சன் - மயன். வழிக்கொள்ளுதல் -செல்லுதல். திருந்த நோக்குதல் - நன்றாகப் பார்த்தல் வான்முறை - முறைப்படி. |
(4) |
இராவணன் ஆலோசனை மண்டபத்தில் அமர்தல் |
6075. | அவ் வழி, ஆயிரம் ஆயிரம் அவிர |
| செவ் வழிச் செம் மணித் தூணம் சேர்த்திய |