பக்கம் எண் :

14யுத்த காண்டம் 

அவ் எழில் மண்டபத்து, அரிகள் ஏந்திய

 

வெவ் வழி ஆசனத்து, இனிது மேவினான்.
 

அவ்வழி -  அதன்  பின்னர்; ஆயிரம்  ஆயிரம்  -  ஆயிரம்
ஆயிரமாக (பல்லாயிரக்கணக்காக); அவிர்  செவ்வழிச்  செம்மணி-
ஒளி  விளங்குகின்ற   செம்மையான மாணிக்கத்தால்  ஆகிய; தூணம்
சேர்த்திய 
-  தூண்கள்   அமைந்த;   அவ்வெழில்  மண்டபத்து-
அவ்வழகிய  மண்டபத்திலே;  அரிகள்  ஏந்திய- சிங்கங்கள்  சுமந்த;
வெவ்வழி     ஆசனத்து  -    விரும்பத்தகும்   தன்மையுடைய
அரியணையிலே;  இனிது   மேவினான்  -   (இராவணன்)   இனிது
வீற்றிருப்பானானான்.
 

வெம்மை - வேண்டுதல்,  விரும்புதல்.  அவிர்தல்  -  ஒளி  வீசுதல்.
     

(5)
 

இராவணன் அமைச்சர் சூழ அமர்ந்திருத்தல்
 

6076.

வரம்பு அறு சுற்றமும், மந்திரத் தொழில

 

நிரம்பிய முதியரும், சேனை நீள் கடல்

 

தரம் பெறு தலைவரும், தழுவத் தோன்றினான்-

 

அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான்.
 

அரம்பையர்  -  அரம்பையர்  முதலிய  தேவ  மாதர்கள்  வீசும்;
கவரியோடு  ஆடும்  தாரினான்  -  கவரியோடு  ஆடும் மாலையை
அணிந்தவனாகிய    இராவணன்;    வரம்பு    அறு    சுற்றமும் -
எல்லையில்லாத   சுற்றத்தவர்களும்;   மந்திரத்   தொழில் நிரம்பிய
முதியரும்  
-   மந்திராலோசனையில்    வல்ல    வயது   முதிர்ந்த
அமைச்சர்களும்;   சேனை   நீள்  கடல் தரம் பெறு தலைவரும் -
சேனையாகிய பெரிய கடல் நடத்தும் தகுதி மிக்க தானைத்தலைவர்களும்;
தழுவத் தோன்றினான் - தன்னைச் சூழ்ந்திருக்க, விளங்கினான்.
    

மந்திரம்-ஆலோசனை. தரம்-தகுதி (மேன்மையும் ஆம்) அரம்பையர்
கவரி  வீசுதல்  இராவணனுக்குச்  செய்யும் உபசாரமாம். கவரி  அசைய
இராவணன் மார்பிலணிந்திருந்த மாலையும் அசைந்தது.
  

(6)
 

6077.

'முனைவரும், தேவரும், மற்றும் உற்றுளோர
எனைவரும், தவிர்க!' என ஏய ஆணையான்,