பக்கம் எண் :

16யுத்த காண்டம் 

மண்டபத்துக்குள்   வாராதபடி  தடை  விதித்தான்;   (அதன்  பின்)
பண்டிதர் -  கல்வி  மேம்பாடுடைய  அறிஞர்களும்;  பழையவர்-
நீண்ட  நாள்கள்  பழகிய   பழமையோரும்;   கிழவர் -  நெருங்கிய
உறவுடைய   சுற்றத்தினரும்;    பண்பினர்  -   நல்ல   பண்புடைய
நட்புடையவர்களும்;   தண்டல்   இல்   மந்திரத்  தலைவரும் -
தன்னைப்    பிரிந்து    என்றும்     நீங்குதல்    இல்லாத    நல்ல 
ஆலோசனைகளைக்   கூற   வல்ல   அமைச்சர்களும்; சார்க என-
மந்திராலோசனை மண்டபத்துக்கு வருக என்றுகூறி; கொண்டு  உடன்
இருந்தனள்
- அவர்களை உடன் கொண்டு அமர்ந்தான்.
 

கிழவர் - நெருங்கிய  உறவினர்.  கொற்ற  ஆணை - வெற்றி தரும்
கட்டளையாம்.
 

(8)
 

6079.

ஆன்று அமை கேள்வியர் எனினும், ஆண்தொழிற்கு
ஏன்றவர் நண்பினர் எனினும், யாரையும்,
வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர
போன்றவர் அல்லரை, புறத்துப் போக்கினான்.
 

வான் துணைச் சுற்றத்து- தனக்கு  நல்ல  துணையாக  இருக்கும்
சுற்றத்தினருள்ளும்;  ஆன்றமை  கேள்வியரெனினும் - நிறைந்த கல்வி
கேள்வியுள்ளவர்கள்  என்றாலும்;ஆண் தொழிற்கு ஒன்றவர் நண்பினர்
எனினும் 
-  ஆண்மைத்   தொழில்   செய்வதற்குரிய    நட்புடையவர்
என்றாலும்; மக்கள், தம்பியர் போன்றவர் அல்லரை - தனது  மக்கள்
தம்பிமார்கள் போன்றவர்  அல்லாதாரை; யாரையும் -  வேறு எவரையும்;
புறத்துப் போக்கினான் - அந்த மண்டபத்தை விட்டு வெளியே போகச்
செய்தான்.
 

இராவணன் என்ற எழுவாய் வரவழைத்துப் பொருள் கொள்ளப்பட்டது.
ஆன்று - நிறைந்து  அமை - பொருந்திய ஆண்தொழில் -போர்த்தொழில்
என்றவர் - ஏற்றவர் (தகுதி  உள்ளவர்)  'யாவரையும்'  என்றது  யாரையும்
எனநின்றது விகாரம்.
 

(9)
 

6080.

திசைதொறும் நிறுவினன், உலகு சேரினும்
பிசை தொழில் மறவரை; பிறிது என் பேசுவ-
விசையுறு பறவையும், விலங்கும், வேற்றவும்,
அசைதொழில் அஞ்சின, சித்திரத்தினே?
 

உலகு  சேரினும்- எல்லா  உலகங்களிலும்  உள்ளவர்  எல்லோரும்
எதிர்த்து வந்தாலும்; பிசை தொழில் மறவரை -