பிசைந்து ஒழிக்க வல்ல வீரர்களை; திசை தொறும் நிறுவினன் - எல்லாத திசைகளிலும் நிறுத்தி வைத்தான்; விசை உறு பறவையும் - (அதனால்) விரைந்து செல்லும் பறவைகளும்; விலங்கும் - மிருகங்களும்; வேற்றவும் - மற்றவையும்; சித்திரத்தினே- சித்திரத்தில் உள்ளவை போல; அசை தொழில் அஞ்சின - சிறிதே அசைவதற்கும் அஞ்சினவாயின; பிறிது என் பேசுவ - (என்றால்) வீரர்களின் காவல் திறத்தை வேறு என்ன பேசுவதற்கிருக்கிறது. |
"வேற்றவும்" என்பது பறவையும், விலங்கும் அல்லாத மானிடர் முதலியவர்களை. பேசுவ - பேசுவது என்னும் பொருளுடையது. சித்திரத்தினே - சித்திரத்தைப் போல 'இன்' உவமைப் பொருள் தந்து நின்றது. |
(10) |
இராவணன் உரை |
6081. | 'தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது ஏன், இனி? |
| மாட்சி, ஓர் குரங்கினால் அழிந்த, மாநகர்; |
| ஆட்சியும், அமைவும், என் அரசும் நன்று!' எனா, |
| சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்: |
|
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர் - (இராவணன்) எனது பெருமை ஒரு குரங்கினால் சிறந்த இலங்கை நகர் அழிந்தது என்றால், இதனின் மேல் - இதை விடவும்; இங்கு தாழ்ச்சி தருவது இனி என் - இங்கு எனக்கு தாழ்வைத்தருவது வேறு என்ன இருக்கிறது? ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று - எனது ஆட்சி பலமும் அமைந்துள்ள தகுதியும் எனது அரச பதவியும் நன்றாயிருக்கிறது! எனா, சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான் - என்று தனது அமைச்சர்களை நோக்கிக் கூறுவானாயினான். |
ஆட்சி - ஆட்சி புரியும் திறம். அமைவு-பொருந்திய சிறப்பு அரசு - அரச பதவியை உணர்த்தும். சூழ்ச்சியின் கிழவர் - ஆலோசனையில் வல்ல அமைச்சர்கள். |
(11) |
6082. | 'சுட்டது குரங்கு; எரி சூறையாடிடக் |
| கெட்டது, கொடி நகர்; கிளையும் நண்பரும் |
| பட்டனர்; பரிபவம் பரந்தது, எங்கணும்; |
| இட்டது இவ் அரியணை இருந்தது, என் உடல். |