குரங்கு சுட்டது - ஒரு குரங்கு சுட்டது;எரி சூறை ஆடிட - நெருப்பு சூறையாட (கொள்ளை கொள்ள); கொடி நகர் கெட்டது - கொடிகள் கட்டப்பட்டுள்ள இலங்கை மாநகரமே அழிந்தது; கிளையும் நண்பரும் பட்டனர் - உறவினர்களும், நண்பர்களும் இறந்தனர்; பரிபவம் எங்கணும் பரந்தது - அவமானம் எங்கும் பரவியது;இட்டது இவ்வரியணை - இங்கு இடப்பட்ட இந்தச் சிங்காதனத்திலே; என் உடல் இருந்தது - (நேர்ந்த தீமையைத் தடுக்க இயலாத) எனது உடல் (பலனின்றி) இருந்தது. |
எரி - நெருப்பு. சூறையாடல் - கொள்ளை இடுதல். பரிபவம் - அவமானம். |
(12) |
6083. | 'ஊறுகின்றன கிணறு உதிரம்; ஒண் நகர் |
| ஆறுகின்றில தழல்; அகிலும் நாவியும் |
| கூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு |
| நாறுகின்றது; நுகர்ந்திருந்தம், நாம் எலாம். |
|
கிணறு உதிரம் ஊறுகின்றன - இலங்கை மாநகரில் உள்ள கிணறுகளில் நீருக்குப் பதிலாக இரத்தம் ஊறுகின்றன; ஒள் நகர் அழல் ஆறு கின்றில - (இலங்கையில் அனுமன் வைத்த) தீ இன்னும் ஆறவில்லை; அகிலும் நாவியும் கூறும் - அகிலும், கத்தூரியும் கமழ்வது என்று கூறுகின்ற; மங்கையர் நறுங்கூந்தலின்- இலங்கை வாழ் பெண்களின் மணம் மிக்க கூந்தல் யாவும்; சுறு நாறுகின்றது - சுறு நாற்றம் நாறுகின்றது; நாம் எலாம் நுகர்ந்து இருந்தம் - அதனை நாம் எல்லோரும் அனுபவித்து இருந்தோம். |
சுறு நாற்றம்-கூந்தலில் நெருப்புப் பிடிப்பதால் எழும் துர்நாற்றம். இருந்தம் - இருந்தோம். தன்மைப்பன்மை வினைமுற்று. ஒள் நகர்- ஒளி பொருந்திய நகரம் (இலங்கை) அகில் -அகிற்புகை. நாவி- கஸ்தூரிக் கலவை. |
(13) |
6084. | 'மற்று இலது ஆயினும், "மலைந்த வானரம் |
| இற்று, இலதாகியது" என்னும் வார்த்தையும் |
| பெற்றிலம்; பிறந்திலம் என்னும் பேர் அலால், |
| முற்றுவது என்? இனி, பழியின் மூழ்கினாம்!' |
|
மற்று இலது ஆயினும்- வேறு எதுவும் நாம் செய்யவில்லை எனினும்,மலைந்த வானரம் - இங்கு வந்து போர் செய்த ஒரு குரங்கு (அனுமன்) இற்று இலதாகியது- செத்து ஒழிந்து போயிற்று; |