பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 19

என்னும் வார்த்தையும் பெற்றிலம்- எனப்  பிறர் கூறும் பேச்சைக்
கூடக் கேட்கப்  பெற்றிலோம்;பிறந்திலம் என்னும்  பேர்  அலால்
- பிறந்தும் பிறவாதவரானோம்  என்ற  பெயரைத்தவிர,    பழியின்
மூழ்கினோம் 
- பழியாகிய  கடலிலே   மூழ்கி  விட்ட நாம்;  இனி
முற்றுவது என்
- இனி என்ன செய்து முடிக்கப் போகிறோம்.
 

ஒரு குரங்கை ஏவி, நமக்குத் தீமை விளைவித்த பகைவர் வாழும்
இடம்   சென்று   வென்று    வரவில்லை   என்றாலும்   என்பான்,
'மற்றிலதாயினும்' என்றான்.  முற்றுதல்-செய்து  முடித்தல். மலைதல்-
போர் செய்தல்.
 

(14)
 

படைத்தலைவன் கூற்று
 

6085.

என்று அவன் இயம்பலும், எழுந்து இறைஞ்சினான்,
கன்றிய, கருங் கழல், சேனை காவலன்;
'ஒன்று உளது உணர்த்துவது; ஒருங்கு கேள்!' எனா,
நின்றனன், நிகழ்த்தினன், புணர்ப்பின் நெஞ்சினான்:
 

என்று அவன் இயம்பலும்- என்று இராவணன்  கூறவும்;கன்றிய
- இராவணனுடைய பேச்சினால்  வருந்திய;   சேனை    காவலன் -
படைத்தலைவனான   பிரகத்தன்;  புணர்ப்பின்     நெஞ்சினான் -
சூழ்ச்சி மனமுடையவனுமாகிய   அவன்;  எழுந்து   இறைஞ்சினான்
-  எழுந்து இராவணனை  வணங்கி;  ஒன்று உளது   உணர்த்துவது
-  உனக்குத் தெரிவிப்பது  ஒன்று  உண்டு;  ஒருங்கு  கேள்  எனா
- அதை    முழுவதும்   கேட்பாயாக   என்று   கூறி;    நின்றனன்
நிகழ்த்தினன்
- நின்று கூறுவானானான்.
  

படைத்தலைவன்    ஆதலால்  முதலில்  பேசினான்.   பிரகத்தன்
என்பது  அவன்    பெயர். கருங்கழல் - வலிய வீரக்கழல். புணர்ப்பு-
சூழ்ச்சி. கன்றுதல் -மனம் வருந்துதல். ஒருங்கு-முழுவதும்.
 

(15)
 

6086.

' "வஞ்சனை மனிதரை இயற்றி, வாள் நுதல்,
பஞ்சு அன மெல் அடி, மயிலைப் பற்றுதல்
அஞ்சினர் தொழில்" என அறிவித்தேன்; அது
தஞ்சு என உணர்ந்திநிலை-உணரும் தன்மையோய்!
 

உணரும்   தன்மையோய்   -  நன்மை  தீமைகளை  உணரும்
தன்மை    உடையவனே!    மனிதரை   வஞ்சனை    இயற்றி  -
மானிடர்களான  இராம, இலக்குவர்களை வஞ்சித்து;வாள் நுதல் -