பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 21

வண்டு  அமர்  அலங்கலாய்- வண்டுகள்  தங்கியிருக்கும்  மலர்
மாலை  அணிந்த  (வெற்றி  மாலையை  உணர்த்தும்) தண்டம்  என்று
ஒரு பொருட்கு
- தண்டனை என்ற ஒரு  செயலுக்கே;  உரிய  தக்கரை
-  உரியவர்களான   கள்வர்களை   (ராமலக்குவரை)  உலகம்  காவலர்
-  நாடாளும்   மன்னர்கள்;   கண்டவர்  பொறுப்பரோ  -  பார்த்தும்
அவர்களைப்  பொறுத்துக்  கொள்வார்களோ;  விண்டவர் உறு வலி -
பகைவர்களின்  மிகுந்த   வலிமையை;   அடக்கும்  வெம்மையோர் -
அடக்கும் வலிமை உடையவர்கள்;வணங்கி வாழ்வரோ - அப்பகைவரை
வணங்கி வாழ்வார்களோ? (வாழமாட்டார்கள்).
 

தண்டம் - தண்டனை. தக்கர்-கள்வர். வெம்மை-ஆற்றல் வலிமையுமாம்
என்பது கருத்து.
 

(18)
 

6089.

'செற்றநர், எதிர் எழும் தேவர், தானவர்,
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற,
முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது.
வெற்றியோ? பொறைகொலோ? விளம்ப

வேண்டுமால்.

 

செற்றனர்  எதிர்  எழும்  -  சினம் கொண்டவர்களாக எதிர்த்துப்
போருக்கு   எழுந்து   வரும்;  தேவர்,  தானவர்  -  தேவர்களையும், அசுரர்களையும்;கொற்றமும் வீரமும் வலியும் - அவர்களின் வெற்றியும்,
வீரமும்,  வலிமையும்;  கூட்டு  அற முற்றி - ஒரு சேர அழியச் செய்து
முடித்து; மூன்று  உலகுக்கும்  - விண்ணுலகம், மண்ணுலகம், கீழுலகம்
ஆகிய  மூன்று  உலகங்களுக்கும்; முதல்வன்  ஆயது - நீயே (ஒப்பற்ற)
தலைவனாக ஆனது;வெற்றியோ - பகைவர் மேல் படை எடுத்துச் சென்ற
வெற்றியினாலா?  பொறை  கொலோ -  பொறுத்திருந்ததாலா? விளம்ப
வேண்டும்
- நீயே கூறுவாயாக.
 

செற்ற-சினந்த. தானவர்-தனு வழி வந்த அசுரர்கள். முற்றுதல்-முடித்தல்.
 

(19)
 

6090.

'விலங்கினர் உயிர் கெட விலக்கி, மீள்கலாது,
இலங்கையின் இனிது இருந்து, இன்பம்

 துய்த்துமேல்,-

குலம் கெழு காவல!- குரங்கின் தங்குமோ?
உலங்கும் நம்மேல் வரின், ஒழிக்கற்பாலதோ?