பக்கம் எண் :

22யுத்த காண்டம் 

குலம் கெழு காவல! - நமது குலம் விளங்கத் தோன்றிய அரசே!
விலங்கினர் உயிர் கெட  விலக்கி -  மாறுபட்ட  பகைவர்  பால்
சென்று  உயிர்  அழியக்  கொன்று  நீக்கி;  மீள்  கலாது - திரும்பி
வருதலைச்  செய்யாமல்; இலங்கையில்  இனிதிருந்து  -  இலங்கை
மாநகரிலே இனிது வீற்றிருந்து;இன்பம் துய்த்து  மேல் - இன்பத்தை
நுகர்ந்திருப்போமானால்;குரங்கின் தங்குமோ-குரங்குகளின் அளவில்
நிற்குமோ?  உலங்கும்  நம்  மேல்வரின் - கொசுக்களும் நம்மேல்
படை  எடுத்து  வருமாயின், ஒழிக்கற் பாலதோ - அதனை விலக்கி
வெற்றி பெரும்பான்மை நமதோ?
 

விலங்குதல் - மாறுபடுதல்,  விலக்கி  -  நீக்கி. உலங்கு - கொசு.
 

(20)
 

6091.

'போயின குரங்கினைத் தொடர்ந்து போய், இவண்
ஏயினர் உயிர் குடித்து, எவ்வம் தீர்கிலம்;
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல்.
ஓயும், நம் வலி' என, உணரக் கூறினான்.
 

போயின  குரங்கினைத்   தொடர்ந்து  போய்  -  இலங்கை
பாழாகச்  செய்து   சென்ற  குரங்கைத்  தொடர்ந்து  சென்று; இவண்
ஏயினர்  உயிர்  குடித்து 
-  இங்கு   அந்தக்   குரங்கை   ஏவிய
மனிதர்களின்  உயிரைப் பருகி; எவ்வம்  தீர்கிலம் - நமக்கு நேர்ந்த
பழியைப்  போக்கோமாய்;வாயினும்  மனத்தினும்  -   சொல்லிலும்
நினைப்பிலும்; வெறுத்து   வாழ்து  மேல்  -  வெறுப்பைக்   காட்டி
வாழ்வோமாயின்;நம் வலி  ஓயும் - நமது வலிமை குறைவாகும்; என
உணரக் கூறினான்
- என்று, உணருமாறு கூறினான்.
 

எவ்வம்-பழி வாய் சொல்லையும், மனம் நினைப்பையும் உணர்த்தும்.
ஓய்தல்-குறைதல்.
 

(21)
 

மகோதரன் பேசுதல்
 

6092.

மற்று அவன் பின்னுற, மகோதரப் பெயர்க்
கல் தடந் தோளினான், எரியும் கண்ணினால்
முற்றுற நோக்கினான், 'முடிவும் அன்னதால்;
கொற்றவ! கேள்' என, இனைய கூறினான்:
 

மற்று அவன் பின் உற- படைத்தலைவன்  இவ்வாறு  கூறியபின்பு;
மகோதரப்  பெயர்  -  மகோதரன்  என்னும்  பெயர்  உடையவனும்;
கல் தடம் தோளினன் - மலை போன்ற பெரிய