பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 23

தோள்களை  உடையவனும்;  எரியும்   கண்ணினால்  -  கோலத்தீ
மூண்டெழும்  கண்களை  உடையவனும்  ஆகிய  அமைச்சன் எழுந்து;
முற்றுற  நோக்கினான்  -  நடந்த   செயல்  முழுதையும்  ஆய்ந்து;
கொற்றவ -அரசே;முடிவும்  அன்னதால்   -   படைத்  தலைவன்
கூறியதே  முடிந்த  முடிபு  எனினும்; கேள்  -  நான்  உரைப்பதையும்
கேட்பாயாக; என   இனைய   கூறினான்   -  என்று  பின்வருமாறு
கூறலானான்.
 

மற்று - வினை  மாற்றுப்  பொருளில்  வந்த அசை. 'அவன்' என்று
படைத்தலைவனை கல்-மலை, முற்றுற-முற்றும் உற.
 

(22)
 

6093.

'தேவரும் அடங்கினர்; இயக்கர் சிந்தினர்;
தா வரும் தானவர் தருக்குத் தாழ்ந்தனர்;
யாவரும், "இறைவர்" என்று இறைஞ்சும் மேன்மையர்
மூவரும் ஒதுங்கினர்-உனக்கு, மொய்ம்பினோய்!
 

மொய்ம்பினோய்  உனக்கு   -  வலிமை  மிக்கவனே!  உனக்கு;
தேவரும்  அடங்கினர்  -  தேவர்களும்  அஞ்சி அடங்கி விட்டனர்;
இயக்கர்  சிந்தினர் 
-  இயக்கர்கள்  வலிமை  இழந்து  விட்டார்கள்;
தாவரும் தானவர்
- கேடில்லாத அசுரர்களும்; தருக்குத் தாழ்ந்தனர்
- ஆணவம் அடங்கினர்; யாவரும் இறைவர்  என்று  இறைஞ்சும் -
எல்லோரும்  'கடவுளர்'  என்று  வணங்கும்; மேன்மையர் மூவரும் -
பெருமை மிக்க அரி, அரன், அயன் என்னும் மும்மூர்த்திகளும்; உனக்கு
ஒதுங்கினர்
- உன்னை எதிர்த்து நிற்க இயலாது விலகிப் போனார்கள்.
 

தேவரும்,  இயக்கரும்,  தானவரும் இராவணனது  திக்கு விஜயத்தின்
போது   தோற்று   அடங்கி   விட்ட   செய்தி   உத்தர  காண்டத்தில்
கூறப்பட்டுள்ளது. தருக்கு, மொய்ம்பு-வலிமை.
 

(23)
 

6094.

'ஏற்றம் என் பிறிது, இனி-எவர்க்கும் இன் உயிர்

 

மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை

 

கூற்றுவன், "தன் உயிர் கொள்ளும் கூற்று" எனத்

 

தோற்று, நின் ஏவல் தன் தலையில் சூடுமால்?
 

எவர்க்கும்  இன்னுயிர்  மாற்றுறும்  -  எத்தகைய வலியவர்களின்
இனிய   உயிரையும்  மாற்றி  அழிக்கும்;  முறைமை   சால்   வலியின்
மாண்பமை கூற்றுவன்
- இயல்பு வாய்ந்த வலிமையின்  பெருமையமைந்த எமனும்;தன்னுயிர் கொள்ளும் - தனது