உயிரைக் கவரும்; கூற்று எனத் தோற்று - எமன் என்று தோல்வியுற்று; நின் ஏவல் தன் தலையில் சூடும் - உனது கட்டளையைத் தன் தலைமேல் தாங்கிச் செய்வான்; என்றால் இனி பிறிது ஏற்றம் என் - இனி இதை விடவும் வேறு பெருமை என்ன இருக்கிறது? |
(24) |
6095. | 'வெள்ளிஅம் கிரியினை விடையின் பாகனோடு |
| அள்ளி, விண் தொட எடுத்து, ஆர்த்த ஆற்றலாய்! |
| சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு |
| எள்ளுதி போலும், நின் புயத்தை, எம்மொடும்? |
|
வெள்ளி அம்கிரியினை - பனியால் வெண்மை நிறத்தை உடைய அழகிய கைலாய மலையை; விடையின் பாகனோடு அள்ளி - அம்மலையில் வாழும் காளை வாகனத்தை உடைய சிவபெருமானுடன் அள்ளி;விண் தொட எடுத்து - விண்ணைத் தொடும்படி தூக்கி நிறுத்தி;ஆர்த்த ஆற்றலாய் - ஆர்ப்பரித்த ஆற்றல் மிக்கவனே; சுள்ளியில் இருந்து உறை - மரத்தின் சுள்ளிகளிலே வசிக்கும்; குரங்கின் தோள் வலிக்கு - ஒரு குரங்கின் தோளாற்றலுக்கு; நின்புயத்தை எம்மொடும் - உனது தோள் வலிமையை எங்களது ஆற்றலுடன் சேர்த்து; எள்ளுதி போலும் - இகழ்ந்து பேசுவாய் போலும். |
வெள்ளியங்கிரி - கைலாயமலை. அள்ளுதல் - கையில் எடுத்தல். இருந்து உறை - தங்கி வாழும். 'எள்ளுதி போலும்' என்ற இடத்தில் 'போல்' என்பது உரையசை. ஒப்பில் போலி என்பர். |
(25) |
6096. | 'மண்ணினும், வானினும், மற்றும் முற்றும் நின |
| கண்ணினும் நீங்கினர் யாவர், கண்டவர்? |
| நண்ண அரும் வலத்தினர் யாவர், நாயக! |
| எண்ணிலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ? |
|
நாயக - எமது தலைவனே! மண்ணினும் வானினும் - மண்ணுலகிலும், விண்ணுலகிலும்; மற்றும் முற்றும் - மற்றும் வேறுலகங்கள் முழுவதிலும்;நின் கண்ணினும் நீங்கினார் யாவர் கண்டவர்- உனது கண்ணுக்குப் புலப்படாதிருப்பவரைக் கண்டவர்கள் யார்? நண்ணரும் வலத்தினர் யாவர்?- அவ்வாறு கண்டவருள்ளும் உன்னால் நெருங்கமுடியாத வலிமை உடையவர் யாருண்டு;எண்ணிலர் - உன்னை மதித்து எண்ணிப் |