பக்கம் எண் :


16புலவர் குழந்தை

   
               பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்
                சிறப்புப் பாயிரம்
 
    

 
பாவண மல்குமி ராவண காவியம்
நாவண மல்கிய நல்லா சிரியனும்
நலமலி ஓல வலசுவாழ் முத்துச்
சாமிசின் னம்மை காமுறு செல்வ
மைந்தனும் ஆய செந்தமிழ்க் குழந்தை
செப்பினான் அறிவுல கொப்பு மாறே.
இராவண காவியம் எனுமிது தமிழகத்
திராவிடம் இலையெனத் திராவிடர் புரிக.
ஆக்கியோன் குழந்தையும் போக்கறு பனுவலும்
ஆழிசூ ழுலகில் என்றும்
வாழிய நன்றே வாழிய நன்றே.

                                 - பாரதிதாசன்