எண்சீர் விருத்தம் |
66. ஒப்புடைய விருவருளத் தரும்பி நோக்கு முயர்நோக்கத் திடைமலர்ந்து காட்சி யென்னும் ஒப்பரிய பெரும்பொருளா லிளங்கா யாகி ஊடலுணர் வெனும்பொருளால் நறுங்கா யாகித் தப்பரிய மணவினையாற் கனிய தாகித் தனியறத்தி னிடைப்பிரிவாற் சுவைத்தேன் சொட்டும் கப்பியசெந் தமி்ழ்க்காதற் கனியைப் போலோர் கனியுண்ே்டா வென்காதற் கனியே யென்றான். |
அறுசீர் விருத்தம் |
67. என்றவ னிருக்கப் பொன்னை யீன்றவ னிறைவன் மாட்டுச் சென்றவ ருடன்பாட் டோடு திரும்புவ ருண்மை யாக என்றவ னிருக்கச் சென்றோ ரின்முகங் காணா முன்னர் நன்றது கனியோ காயோ நவில்கெனக் கனியே யென்றார். 68. மற்றவர் சென்ற வாறும் மன்னனைக் கண்ட வாறும் உற்றதைக் கேட்ட வாறும் உள்ளதை யுரைத்த வாறும் கொற்றவ னுடன்பாட் டோடு கூறியே விடுத்த வாறும் தெற்றென வுரைத்தார் வேந்துந் திருமணங் கண்டே னென்றான். 69. அங்கதை மற்றெல் லாரு மறிந்துமே யுவகை பூத்து மங்கல மணநன் னாளின் வரவெதிர் பார்த்தி ருந்தார்; திங்களை முகத்தால் வென்று தேனையின் சொல்லால் வென்ற நங்கையின் மகிழ்ச்சிக் கொப்பு நானறி கின்றி லேனே. |
5. திருமணப் படலம் |
அறுசீர் விருத்தம் |
1. பொருவரு மொப்பின் மிக்க பூவையும் போர்வல் லானும் ஒருவரை யொருவர் கண்ணுற் றுளந்தரு காத லாலே திருமிகு மாயோன் செல்வி செய்தியை யினிது கண்டாம் மருவிய காத லாரின் மணவினைச் சிறப்பைக் காண்பாம். ------------------------------------------------------------------------------------------- 66. ஊடல் - அன்பின் பெருக்கால் இருவர்க்கு முண்டாகும் ஐயப் பாட்டால் காதலர்க்கு ஏற்படும் மனவேறுபாடு. உணர்வு - அது தீர்தல். |