14

உரை எவ்வாறு எவ்வாறு அமையவேண்டும் என்பது 16. 5. 1992இல்
நடந்த   அமைப்புக்    கூட்டத்தில்    முடிவுசெய்யப்பெற்றது.. அந்த
வழிகாட்டலை   மனங்கொண்டு   உரையாசிரியர்  ஒவ்வொருவருக்கும்
அவரவர்க்கு  ஒதுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து  பப்பத்து பாடல்களுக்கு
உரை எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பெற்றனர்.

1992   ஜூன்   மாதம்  27,  28,  ஆகிய   இரண்டு   நாள்களில்
உரையாசிரியர்கள்  இரண்டாம் முறையாக கூடினர்.  அவர்கள் எழுதிய
உரை  பகுதிகளைப்  பேராசிரியர்  அ.  ச.  ஞா முதலிலேயே படித்து
வந்தார்;  கூட்டத்தில் ஒவ்வொருவர் உரையையும் வரிவரியாகப்  படித்து
திறனாய்வு     செய்தார்.     இந்தத்    திறாய்வு    விவாதத்தினால்
விளக்கவுரையின்  அமைப்பு  எவ்வாறு  இருக்க  வேண்டும்  என்பது
தெளிவாயிற்று.

அதன்பின்னர்  உரையாசிரியர்கள் பணியைத் தொடர்ந்து செய்தனர்.
முடிவு  நிலையில்  மீண்டும்  பேரா. அ.ச.ஞா. வரி  வரியாகப் படிக்கக்
கேட்டு, வேண்டிய மாற்றங்கள் திருத்தங்கள் செய்தார்.

செந்தமிழ்  வித்தகர் - திறனாய்வு  வேந்தர் - கம்பன்  கலை நிலை
கண்டவராகிய  அ.ச.ஞா.  வின் நெறிகாட்டலிலும்  பதிப்புப் பணியிலும்
முடிவான வடிவைப் பெற்றதே இந்தக் கம்பராமயண விளக்க உரை.

உரையாசிரியர்களின்     உரிமைக்கு   ஊறு   இல்லாமல்   கவிச்
சக்கரவர்த்தியின்   கருத்துவளம்   புலப்படும்   வகையில்  பதிப்புப்
பணியை மேற்கொண்டது அ.ச.ஞா. வின் சிறப்பு.

முன்னோடிகள்

கோவை,   கம்பன்  அறநிலை   வெளியிடும்   இந்தப்  பதிப்புக்கு
முன்னும்   பல   உரைப்   பதிப்புகள்    வெளிவந்துள்ளன;   மூலப்
பதிப்புகளும்    பல    உண்டு.   முன்னோர்    செய்த   பணிகளை
நன்றியுணர்வோடு போற்றும் உரையாசிரியர்கள்,  தங்கள்  தனித்தன்மை
கெடாமலும் விளக்க உரையை  வகுத்திருத்திறார்கள்.  பல வகைகளிலும்
இவ்  விளக்க  உரைக்குத்  தனிச்சிறப்புகள்   உண்டு  என்பது  உறுதி.
மேலோரக்ளின்  காட்சிகளையும் கண்டு. காலமும் சூழலும்  தரும் புதுக்
காட்சி விளக்கங்களையும் கொண்டது இந்தப் பதிப்பு.

யாப்பிலக்கண விதிப்படி சீர்கள் பிரிக்கப் பெறாமல், ஒறளவு தமிழ்ப்
பயிற்சி    உடையவர்களும்   எளிதில்  மூலத்தைப்  படித்துணருமாறு
சொற்-பொருள் தெளிவுக்கு ஏற்பச் சீர்கள்