வகுத்துக்கொண்ட விதிமுறைகள்இப்பதிப்பிலே பின்பற்றப்பட்டுள்ளன. ஆயினும், யாப்பிலக்கண நெறியை அடியோடு புறக்கணித்துவிடாமல், பாடல்கள் யாப்பு வகையில் இன்னின்ன பா அல்லது பாவினத்துக்கு உரியன என்ற விவரமும் இப்பதிப்பில் தரப்பட்டுள்ளது. காண்டத்தைத் திறனாய்வுமுறையில் அறிமுகப்படுத்தும் கட்டுரை, முன்னுரையாக இப் பதிப்பின் தொடக்கத்தில் உள்ளது. படலந்தோறும் மிகச்சுருக்கமான முன்னுரை உண்டு. சொற்பொருள் நோக்கியவகையில் சீர் பிரித்த செய்யுள், பதவுரை, விளக்கவுரை, இன்றியமையாத இலக்கணக் குறிப்பு, ஒப்புமைப் பகுதி ஆகியவை கொண்டது இவ் விளக்கவுரைப் பதிப்பு. இறுதியில் செய்யுள் முதற்குறிப்பு அகராதியும் அருஞ்சொல் அகராதியும் காணலாம். இடைச்செருகலாகவோ பிற வகையாலோ நூலுள் இடம் பெறும் தகுதியற்றவை யாயினும், ஏடுகளில் இடம் பெற்றுவி்ட்ட மிகைப் பாடல்களையும் புறக்கணிக்க விரும்பவில்லை. ஆராய்ச்சியாளர்க்கு அம் மிகைப் பாடல்களும் ஏதேனும் பயன் தரக்கூடும். ஆகையால், மிகைப் பாடல்களும் காண்டத்தின் இறுதியில் தரப்பெற்றுள்ளன. பல்கலைச் செல்வர் தெ. பொ. மீ., டாக்டர் தெ. ஞானசுந்தரம், பேராசிரியர் அ. ச. ஞா. ஆகியோர் ஏற்கனவே வரையறுத்துள்ளபடி வெளிவந்த சென்னைக் கம்பன் கழகத்தின் மூலப் பதிப்பு இவ்வகையில் ஓரளவு உதவியது. அப் பதிப்பிலுள்ள பாடங்களை அப்படியே ஏற்காமல், உரையாசிரியர்களின் ஆய்வுணர்வுக்குப் பொருத்தம் என்று பட்ட பாடங்கள் சில இப் பதிப்பில் இடம் பெறுகின்றன. கம்ப ராமாயணப்பாடல் நிரல் எண் ஒன்றேயாக இருப்பது ஆய்வாளர்க்கும் வாசகர்க்கும் உதவியாக அமையும் என்பதால், சென்னைக் கம்பன் கழகப் பதிப்பி லுள்ள நிரல் எண் வரிசையே இங்கும் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் முந்தையோர்நெறியையும் பேணி, காலச்சூழல் வழங்கிய புதுக் காட்சியையும் கொண்டு தனி முத்திரை பதிப்பது இப்பதிப்பு என்றால் மிகையாகாது. ஒரு குறிப்பு டாக்டர் அ. அ.மணவாளன் உருவாக்கிய ஒப்பிலக்கிய ஆய்வுக் கட்டுரை விரிவாக முதல் இரு காண்டங்களில்மட்டுமே |