32

என்று ஏற்றுக்கொண்டான் என்று  சொல்வது அர்த்தமற்றதாகி விடும். 
ஆகவே,

     "கடன் இது என்று உணர்ந்தும்"                        (1382)

என்ற சொல்லுக்கு வேறு பொருள் காண்டல் தேவைப்படுகிறது.  ‘கடன் இது
என்று  உணர்ந்தும்’ என்றால் ‘தசரதன் செய்தது அவ்வளவு சரியில்லை. 
பரதனுக்குத்தான் இப்பட்டம் உரியது என்று உணர்ந்தான்.உணர்ந்தும் -
உணர்ந்துவிட்ட பிறகு இரண்டு வகையில் இராகவன் செயல்படக்கூடும்.

     ஒன்று,  தந்தை என்ற முறையிலே  உறவு  வைத்துக்கொண்டு, 
தந்தையைப் பார்த்து,  "தாங்கள்செய்வது அவ்வளவு சரியாக இல்லை. 
இப்பட்டம்  பரதனுக்கே உரியது"  என்று கூறி மறுத்திருக்கலாம். அது
ஒருவகை. இராகவன் அவ்வாறு செய்யவில்லை.  மறுத்துப் பேசுவதற்கும்
தசரதன் வாய்ப்பே கொடுக்கவில்லை. எனவே,  அடுத்த வழி என்ன?"
சக்ரவர்த்தியின் ஆணை எதுவோ அதனைக் கேள்வி கேட்காத முறையில்
,.........yoursis not to question why?but todo and die' என்று
ஏற்றுக்கொள்வதுதான் மற்றொரு வகையாகும்.

     "யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
    நீதிஎற்கு"                               
         (1382)

என்ற இந்த இரண்டாவது வழியை மேற்கொள்கிறான்.

     "யான் நின் வயின் பெறுவது ஈது"                       (1381)

என்று தந்தையோ கெஞ்சுகிறான்.  மகனோ  ‘ கொற்றவன் ஏவியது’ என்று
சொல்லுகின்றான்.இந்த இரண்டுக்குமுள்ள மாறுபாட்டை நன்கு சிந்தித்தல்
வேண்டும்.

     "யாது கொற்றவன் ஏவியது அதுசெயல் அன்றோ
    நீதி எற்கு"                                        (1382)

என்று நினைக்கின்றான் இராகவன்.  ஆகவே,  தசரதன் வரம் கொடு என்று
கெஞ்சினாலும், அதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல்  ‘சக்கரவர்த்தி
தனக்கு ஆணையிட்டதாகவே  நினைக்கின்றான்தசரத குமாரன். ஆகவே,
கொற்றவனுடைய ஆணையை மீறுதல் என்பது யாருக்கும் இயலாத காரியம். 
அந்தமுறையில் ‘அது சரியோ,  தவறோ அதைப்பற்றிக் கவலைப்படாமல் 
‘இது சக்கரவர்த்தியினுடையஆணை.  அதை நிறைவேற்றுவதை தன்னுடைய
கடமை, அதுவே தர்மம்’ என்ற கருத்தில் இருந்தான்’என்றுகம்பன் மிக
அற்புதமாகச் சொல்வான்.