321.'இவன், உலைந்து உலைந்து,
      எழு கடல் புறத்து
அவனியும் கடந்து,
      எயில் அடைந்தனன்;
கவனம் ஒன்று இலான்,
      கால் கடாயென,
அவனி வேலை ஏழ்,
      அரியின் வாவினான்.

     உலைந்து - தோற்று; எயில் - மதில் (இங்கே புற அண்டத்து
எல்லையிலுள்ள மதில்); கவனம் - கலக்கம்; கால் - காற்று; வாவினான் -
தாவினான்.                                                64-1