332.இராமன் அஃது உரைப்பக் கேட்டே,
      இரவி சேய் ஏழது ஆகும்
தராதலத்து அதிர ஆர்த்து, தம்
      முனோன் முன்னர்ச் செல்ல,
பராபரம் ஆய மேருப்
     பருப்பதம் தோற்றிற்று என்ன
கராதலம் மடித்து வாலி கனல்-
      துகள் சிவந்து காட்ட.

     பருப்பதம் - மலை (பர்வதம்); கராதலம் - கை.              61-3