333.சிவந்த கண்ணுடை வாலியும்,
     செங்கதிர்ச் சேயும்,
வெவந்தபோது, அவர் இருவரும்
      நோக்கின்ற வேலை,
கவந்த தம்பியைக் கையினால்
      எடுத்து, அவன் உயிரை
அவந்த மற்றவன் ஆர்
     உயிர் அந்தகற்கு அளிப்போன்.

     வெவந்தபோது - பகை வெம்மையால் மோதிய போது; அந்தகன் -
இயமன்.                                                    62-1