334.வெற்றி வீரனது அடு கணை,
     அவன் மிடல் உரத்தூடு
உற்றது; அப்புறத்து உறாதமுன்,
      உறு வலிக் கரத்தால்
பற்றி, வாலினும் காலினும்
      பிணித்து, அகப்படுத்தான்;
கொற்ற வெங் கொடு
     மறலியும், சிரதலம் குலைந்தான்.

     மிடல் உரம் - வலிமையான மார்பு; உறு வலி - மிகுந்த வலிமை.
                                                          66-1