335. ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை;
      உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை;
வென்று ஆள்வதே என்னில், வேறு ஒன்றம் இல்லை;
      வீணே பிடித்து; என்தன்மேல் அம்பு விட்டாய்;
தன்தாதை மாதா உடன் கூடி உண்ணத்
      தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான்,
நின் தாதை; அன்றேயும், நீயும் பிடித்தாய்;
      நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே!

     செற்றம் - பகைமை; தாதை - தந்தை.                    89-1