10. கிட்கிந்தைப் படலம் 339. | சென்று மாருதிதன்னிடம் சேர்ந்து, அவண் நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும், வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை ஒன்றுவான் அவன்தன்னை உசாவினான். |
வென்றி வீரன் - வெற்றி கொள்ளும் வீரன்; இங்கே (அனுமன்); மேல் வினை - இனிமேல் செய்ய வேண்டிய செயல்கள்; அவன் தன்னை - அவனை (அங்கதனை). 25-1 |