341.மேவினான் கடை சேமித்த மென்மை கண்டு
ஓவு இலா மனத்து உன்னினன் -
எங்கள்பால்
பாவியார்கள்தம் பற்று இதுவோ எனாத்
தேவரானும் சினத்தொடு நோக்கியே.

     சேமித்த மென்மை - அடைந்து வைத்த சிறுமை; தேவரான் -
தேவனாகிய இலக்குவன்.                                       34-1