345. | இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க, முன் போகச் சொன்ன ஆயிர கோடியில் தூதம் தம் திறத்தால், பன்ன ஆறு - இரு வெள்ளம் ஆம் கவிப் படை பயில, - பொன்னின் வார் கழல் இடபன் - அக் கிட்கிந்தை புகுந்தான். |
அவர் இருக்க - இராம இலக்குவர்கள் காத்திருக்க; ஆறு இரு வெள்ளம் - பன்னிரண்டு வெள்ளம்; கவிப் படை - குரங்குப் படை. 1-2 |