347.கங்கைசூடிதன் கருணை பெற்றுடைய
      முன் வாலி
பொங்கும் ஆணையின் எண்திசைப்
      பொருப்பினும் பொலியத்
தங்கி வாழ் கவித் தானை
     அங்கு ஆறு-ஐந்து கோடி
வங்க வேலையின் பரந்திட, -
      வசந்தன் - வந்து அடைந்தான்.

     கங்கை சூடி - சிவபெருமான்; வங்க வேலை - கப்பல்கள் இயங்கும்
கடல்.                                                       1-4