12. நாட விட்ட படலம் 351. | சாரும் வீரர் சதவலி தம்மொடும் கூரும் வீரர்கள் யாவரும் கூடியே, நீரும் நும் பெருஞ் சேனையும் நின்றிடாப் பேரும், பேதையைத் தேடுறும் பெற்றியால். |
சதவலி சாரும் வீரர் தம்மொடும் - சதவலி என்ற தலைவனைச் சார்ந்துள்ள வீரர்களோடும்; கூரும் - (வலிமையால்) மிகும். 9-1 |