357.மாதுஅவள் உயிர்த்த மகவோர்
      இருவர்; வாசப்
போது உறை நறைக் குழல் ஒருத்தி; -
      புகழ் மேலோய்! -
ஏதம் உறு மைந்தர் தவம்
      எய்த அயல் போனார்;
சீதள முலைச் சிறுமி
      தாதையொடு சென்றாள்.

     மாது - சுயம்பிரபையுடன் இருந்த தேவ மாது; போது - விரியும்
பக்குவத்திலுள்ள பூ; நறைக் குழல் - மணமுள்ள கூந்தல்.            61-1